مثل البيت
الذي يذكر الله فيه ، والبيت الذي لا يذكر الله فيه مثل الحي والميت
“அல்லாஹ்வை நினைவு கூறுகின்ற வீட்டுக்கும்,அல்லாஹ்வை நினைவு கூறாமலிருக்கும் வீட்டுக்கும் இடையிலான
வித்தியாசம் உயிருள்ளவருக்கும் உயிரற்றவருக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றதாகும்”
வீடு
என்பது
இஸ்லாமிய
சமூக
அமைப்பில்
மிகப்
பிரதானமான
இடத்தை
வகிக்கிறது.குடும்ப
வாழ்வை
தனிமனித
உருவாக்கம்,சமூகஉருவாக்கம் என்பனவற்றின்
அடிப்படையாகவும் அவை
இரண்டினையும்
ஒன்றிணைக்கும் பிரதான
இடமாகவும்
இஸ்லாம்
பார்ப்பதுதான் இதற்கான
பிரதான
காரணமாகும்.எனவேதான்
ஒருவர்
தனது
விவகாரத்தில்
கவனம்
செலுத்துவதுடன் தனது
குடும்பத்தையும் கவனிக்குமாறு
அல்லாஹ்
கட்டளையிடுகிறான்.
"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ
وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ"-التحريم:06-
"ஈமான்
கொண்டவர்களே! உங்களையும் உங்கள்
குடும்பத்தையும் மனிதர்களும்
கற்களும்
எரிபொருட்களாகக் கூடிய
நரக
நெருப்பிலிருந்து பாதுகாத்துக்
கொள்ளுங்கள்…”
அதே
போன்று
குடும்பத்தாருக்கு தொழுகையை
ஏவுமாறு
நபியவர்களைப்
பார்த்து
குர்ஆன்
குறிப்பிடுகிறது.
"وَأْمُرْ
أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ
نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ"- طه: 132-
"உங்களது
குடும்பத்தாருக்கு தொழுமைாறு
ஏவுங்கள்.நீங்களும்
அதனை
பொறுமையாக
நிறைவேற்றுங்கள்.உங்களிடம்
நாம்
வாழ்க்கை
வசதியை
செய்யுமாறு
கேட்கவில்லை.நாம்
உமக்கு
வாழ்க்கை
வசதியளிக்கிறோம்.தக்வாவுக்கே
சிறந்த
முடிவுள்ளது.”
இந்த வகையில்
நபியவர்கள் தனது குடும்பத்தாருக்கு
தொழுகையை ஏவுபவர்களாக இருந்தார்கள்
وقال ابن أبي حاتم : حدثنا أبي ، حدثنا عبد الله بن أبي زياد القطواني
، حدثنا سيار ، حدثنا جعفر ، عن ثابت قال : كان النبي صلى الله عليه وسلم إذا أصابه
خصاصة نادى أهله : " يا أهلاه ، صلوا ، صلوا " . قال ثابت : وكانت الأنبياء
إذا نزل بهم أمر فزعوا إلى الصلاة .
நபியவர்களுக்கு
ஏதாவது
நிகழ்வுகள்
ஏற்பட்டால்
குடும்பத்தாரை தொழுகைக்காக
அழைப்பார்கள்.இது
நபிமார்கள்
அனைவரதும்
வழக்கமாக
இருந்ததாக
குறிப்பிடப்படுகிறது.
அதே
போன்று
நபியவர்கள்
இரவுத்
தொழுகையிலும்
தனது
மனைவிமாரை
பங்கு
கொள்ளச்
செய்துள்ளதுடன்,அப்படி
செய்யுமாறு
ஏனையவர்களையும் தூண்டி
உள்ளார்கள்.
عن عائشة – رضي الله عنها - قالت : "
كان رسول الله صلى الله عليه وسلم ، يصلي من الليل فإذا أوتر قال قومي فأوتري يا
عائشة " . رواه مسلم ، مسلم بشرح النووي 6/23
“நபியவர்கள் இரவிலே நின்று
வணங்குவார்கள்.அவர்கள்
வித்ர் தொழுகையை
நிறைவேற்றிவிட்டு என்னை
எழுப்பி,வித்ர்
தொழுமாறு வேண்டுவார்கள்”என
ஆயிஷா(றழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " رَحِمَ اللَّهُ رَجُلا قَامَ مِنَ
اللَّيْلِ فَصَلَّى ، وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ ، فَإِنْ أَبَتْ نَضَحَ
فِي وَجْهِهَا الْمَاءَ ، رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ
فَصَلَّتْ ، وَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى ، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي
وَجْهِهِ الْمَاءَ " . رواه
أحمد وأبو داود ، صحيح الجامع
“
ஒருவர் இரவில்
எழுந்து தொழுகின்றார்,அவர்
தனது மனைவியையும்
தொழுகைக்காக எழுப்பி
அவளும் தொழுகையை
நிறைவேற்றுவாள்.அவள்
விழிக்க மறுத்தால்
அவளது முகத்தில்
நீரை தெளித்து
எழுப்புவான்.அத்தகைய
மனிதனுக்கு அல்லாஹ்வின்
அருள் கிடைக்கட்டும்.ஒரு
பெண் இரவில்
எழுந்து தொழுகின்றாள்.அவள்
தனது கணவனையும்
எழுப்பி அவனும்
தொழுகையை நிறைவேற்றுகிறான்.அவன்
விழிக்க மறுத்தால்
அவனது முகத்தில்
நீரை தெளித்து
எழுப்புவாள்.அத்தகைய
பெண்ணுக்கு அல்லாஹ்வின்
அருள் கிடைக்கட்டும்.”
இவ்வாறு நோக்கும்போது
குடும்பமும் வீடும்
ஆன்மீக ரீதியாக
ஒழுங்கு படுத்தப்பட
வேண்டும் என்ற
கருத்தை விளங்குகின்றோம்.அதே
நேரம் இந்த
விடயத்தில் பிரதான
பங்கு வீட்டுத்
தலைவனான ஆணுக்குத்தான்
உள்ளது என்பதனை
மேலுள்ள அல்-குர்ஆன் வசனங்களிலிருந்தும்,ஹதீஸ்களில் இருந்தும் விளங்குகின்றோம்.இதனை
பின்வரும் ஹதீஸ்
தெளிவாகக் குறிப்பிடுகிறது.
قال صلى الله عليه وسلم : " إن الله تعالى
سائل كل راع عما استرعاه أحفظ ذلك أم ضيعه ، حتى يسأل الرجل عن أهل بيته "
“அல்லாஹ் ஒவ்வோர் மனிதனுதும்
பொருப்புக்களை அவன்
சரியாக நிறைவேற்றினானா
அல்லது அதனை
வீணாக்கினானா என்பது
குறித்து விசாரிக்கப்படும்.அது
எது வரை
எனின்,ஒரு
மனிதர் தனது
வீட்டார் குறித்தும்
விசாரிக்கப்படுவார்”
இது பிரதானமாக
குடும்பத்தலைவனுடைய பொருப்பாக
இருந்தாலும் அதனை
ஒழுங்கு படுத்துவதில்
பெண்களாகிய எமக்கு
பெறும் பங்கு
உள்ளது என்பதனை
அல்லாஹ் அருள்
புரிந்த பெண்
தொடர்பாக வரும்
ஹதீஸ் குறிப்பிடுகிறது.
அந்த வகையில்
எமது வீடுகளை
ஆன்மீக ரீதியாக
ஒழுங்கு படுத்தி,அதனை
பேணுவதில் பெண்களாகிய
எமக்கு பெறும்
பங்கு உள்ளது.இது
எமது குடும்ப
அங்கத்தவர்களது ஆன்மீக
வாழ்விலும்பெறும் பங்கு
வகிக்கின்றது என்பதனை
நாம் கவனத்தில்
கொள்ள வேண்டியுள்ளது.எமது
வீட்டு சூழலில்
முக்கியத்துவமளிக்கப்படும் விடயங்கள்தான் எமது
சந்ததிகளின் வாழ்விலும்
முக்கியத்துவமிக்கதாகக் காணப்படும்.ஆன்மீகப்
பெறுமானத்துக்கு உரிய
முக்கியத்துவம் எமது
வீட்டு சூழலில்
கொடுக்கப்படும் போது
அதற்கு முக்கியத்துவமளிக்கும்
சந்ததியை நாம்
எமது வீடுகளில்
இருந்து உருவாக்கலாம்.
எமது வீடுகளை எப்படி ஆன்மீக மயப்படுத்துவது?
சுத்தமும் ஒழுங்கும்
ஆன்மீகம் எனும்
போது முதலில்
சுத்தத்துக்கும் ஒழுங்குக்கும்
பிரதான பங்கு
உள்ளது.ஒரு
வீடு ஆன்மீக
ரீதியாக ஒழுங்கு
படுத்தப்பட்டுள்ளது என்பதன்
பிரதான வெளிப்பாடு,அந்த
வீடும் அதிலுள்ளவர்களும்
சுத்தத்தை பேணுகிறார்கள்
என்பதாகும்.
عن أبي مالك الحارث بن عاصم الأشعري رضي الله عنه قال : قال
رسول الله صلى الله عليه وسلم : ( الطهور شطر الإيمان ، والحمد لله تملأ الميزان ،
وسبحان الله والحمد لله تملآن - تملأ - ما بين السماوات والأرض ، والصلاة نور ،
والصدقة برهان ، والصبر ضياء ، والقرآن حجة لك أو عليك ، كل الناس يغدو ، فبائع
نفسه ، فمعتقها أو موبقها ) رواه مسلم .
“சுத்தம் ஈமானின் பாதியாகும்,அல்லாஹ்வை புகழ்வது மீஸானை
நிரப்புகிறது.அல்லாஹ்வை
துதிப்பதும் புகழ்வதும்
வானம் பூமிக்கு
இடைப்பட்ட இடைவெளியை
நிரப்புகிறது.தொழுகை
ஒளியாகும்.ஸதகா
ஆதாரமாகும்.பெறுமை
ஒளியாகும்.குர்ஆன்
உங்களுக்கு சார்பான
ஆதாரமாக அல்லது
எதிரான ஆதாரமாக
இருக்கும்.ஒவ்வொரு
மனிதனும் காலையில்
எழுந்து சென்று
தன்னை விற்பனை
செய்கிறான்.அதில்
ஒருவர் தன்னை
நரகிலிருநு்து விடுதலை
செய்து கெள்கிறார்
அல்லது நரகில்
சிறைப்படுத்திக் கொள்கிறார்”
இங்கு
ஆன்மீக செயற்பாடுகளாக
நாம் கருதும்
திக்ர், அவ்ராதுகள்,
தொழுகை, ஸதகா,
குர்ஆனுடனான உறவு….மனப்போராட்டம் என்பன
சுத்தத்துடன் தொடர்பு
படுத்தப்பட்டுள்ளது மாத்திரமன்றி,சுத்தம் அவை அனைத்துக்கும்
முதன்மையாக பேசப்பட்டுள்ளது.
தொழுகை போன்ற
இன்னும் பல
இபாதத்களை நிறைவேற்றுவதற்கான
முக்கிய ஷர்த்தாக
சுத்தம் காணப்படுவதனை
காண்கிறோம்.அதேபோன்று
பள்ளிவாயில் சுத்தமாக
இருக்க வேண்டும்
என்பது போல்
அதில் நுழைபவர்களும்
சுத்தமாக இருக்க
வேண்டும் என
ஷரீஆ குறிப்பிடுகிறது.இவை
எல்லாவற்றுக்கும் மேலாக
ஆன்மீக இபாதத்கள்
மனிதனை சுத்தப்படுத்துகிறது
என இஸ்லாம்
கருதுகின்றது.
…”فِيهِ
رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ"-التوبة:108-
“பள்ளிவாயில்களிலே தம்மை
தூய்மைப்படுத்திக் கொள்ள
விரும்புகின்ற மனிதர்கள்தான்
இருக்கின்றார்கள்.அல்லாஹ்
தம்மை தூய்மைப்படுத்திக்
கொள்பவர்களை விரும்புகிறான்.”
அதைப் பார்க்கிலும்
மிகவும் முக்கியமான
ஒரு விடயம்
குடும்ப வாழ்வு
சில இமாம்களின்
கருத்துப்படி நேரடியான
இபாதத்களுடன் சேர்த்துப்
பார்க்க வேண்டிய
ஒரு இபாதத்தாகும்.பிக்ஹிலே திருமணம் தொடர்பான
சட்டங்கள் இபாதத்
சார்ந்தாதாக பார்க்கப்பட
வேண்டுமா அல்லது
பொருளாதார கொடுக்கள்
வாங்கள் நடவடிக்கை
சார்ந்து பார்க்கப்பட
வேண்டுமா என்ற
ஒரு வாதம்
இருக்கிறது.இதில்
ஒவ்வொருவரும் எடுக்கும்
நிலைப்பாட்டைப் பொருத்து
குடும்ப வாழ்வின்
சட்டங்களை அவர்கள்
பார்க்கும் விதமும்
வித்தியாசப்படுகிறது.
இங்கு இதனை
இபாதத் சார்ந்து
பார்ப்பதற்கான வாய்ப்புகளை
அதிகமாகக் காண்கிறோம்.கணவன் மனைவி உறவு
ஹதீஸ்களில் இபாதத்தாக
குறிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு நன்மை கிடைப்பதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில்
குடும்ப வாழ்வு
என்ற இபாதத்
நிறைவேற்றப்படுகின்ற இடமான
வீடு சுத்தமாக
இருக்க வேண்டும்
எனக் காண்கிறோம்.அப்போதுதான் அங்கு
மலக்குகள் வருவார்கள்,ஷைத்தான்கள் வரமாட்டார்கள்.குடும்பங்களில் பிரச்சினைகளும்
விரிசல்களும் குறையும்.
"من أراد
أن يلقى الله طاهرا ومطهرا فليتزوج الحرائر"
”யார்
அல்லாஹ்வை தூய்மையாகவும்
தூய்மைப்படுத்தப்பட்ட நிலையிலும் சந்திக்க விரும்புகிறாறோ
அவர் நல்ல
பெண்களை திருமணம்
செய்து கொள்ளட்டும்”
என்ற ஹதீஸும்
குடும்ப வாழ்வும்
வீடும் ஒருவரை
சுத்தப்படுத்தும் இடம்.எனவே,அது சுத்தமாகவும்
தூய்மையாகவும் இருக்க
வேண்டும் என்பதை
சுட்டுகிறது.அதாவது
ஒவ்வொரு வீடும்
ஒரு பள்ளி
வாயிலாக இருக்க
வேண்டும்.
இதனை பெண்கள்
வீட்டில் தொழுவதன்
சிறப்பு சம்பந்தமாக
குறிப்பிடும் ஹதீஸும்,நபியவர்கள் வீடடை ஜமாஅத்
நடத்துமிடமாக சில
சந்தர்ப்பங்களில் கொண்டமையும்
குறிப்பிடுகிறது.அது
மாத்திரமன்றி மூஸா
(அலை) நோக்கி
”
وأوحينا إلى موسى وأخيه أن تبوءا لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا
الصلاة وبشر المؤمنين“سورة يونس الآية 87
“நீங்கள் உங்கள் வீட்டை
தொழுமிடமாகக் கொள்ளுங்கள்…”
என்ற விடயமும்
இதனைக் குறிப்பிடுகிறது.
அதுபோன்று ஒருவர்
தொழும் தொழுகைகளுள்
பர்ளைத்தவிர மற்றயவை
வீடுகளில் தொழப்படுவதே
சிறந்தது என்ற
நபியவர்களின் வழிகாட்டலும்
இதனைக் குறிப்பிடுகிறது.
يقول صلى الله عليه و سلم: " أفضل
الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة " رواه
البخاري ، الفتح رقم 731
இந்த
வகையில் எமது
வீடகளை சுத்தமும்,நேர்த்தியும் ஒழுங்கும்,அமைதியும் கொண்ட பள்ளி
வாயில்களாக மாற்றுவது
வீட்டை ஆன்மீக
மயப்படுத்துவதில் பிரதான
இடத்தை வகிக்கிறது.
வீட்டில் சந்தர்ப்ப துஆக்களையும் ஆன்மீக ஓழுங்குகளையும் பேணுதல்
روى مسلم في صحيحه أن رسول الله صلى الله عليه
وسلم قال :" إذا دخل الرجل بيته فذكر اسم الله تعالى حين يدخل وحين يطعم ،
قال الشيطان : لا مبيت لكم ولا عشاء هاهنا ، وإن دخل فلم يذكر اسم الله عند دخوله
قال :أدركتم المبيت ،وإن لم يذكر اسم الله عند مطعمه قال : أدركتم المبيت والعشاء
" . رواه الإمام احمد ، المسند 346:3 ، و
مسلم 1599:3
“ஒருவர் வீட்டில் நுழைந்தால்,அவர்
நுழையுமு் போதும்,சாப்பிடும் போதும் அல்லாஹ்வின்
பெயரை நினைவு
கூர்ந்தால் ஷைத்தான்:இன்று உங்களுக்கு இங்கு
உணவும் கிடையாது,இரவு
தங்கவும்முடியாது.என்று
கூறுவான் அவர்
நுழையும் போது,அல்லாஹ்வின் பெயரை
நினைவு கூறாதுவிடின்,இன்று உங்களுக்கு தங்கலாம்
என ஷைத்தான்
கூறுவான்.சாப்பிடும்
போது அல்லாஹ்வின்
பெயரை கூறாது
விடின் இன்று
இரவுச் சாப்பாடுமுள்ளது,நீங்கள் தங்கவும் முடியும்
என்பான்.”
روى الإمام مسلم في صحيحه عن عائشة – رضي الله
عنها – قالت : " كان رسول الله صلى الله عليه و سلم ، إذا دخل بيته بدأ
بالسواك " رواه مسلم كتاب الطهارة باب 15 رقم
44
“நபியவர்கள் வீட்டில் நுழைந்தால்
முதலில் பல்
துலக்குவார்கள்”
இதே
போன்று வீட்டில்
இருந்து வெளியே
செல்லுதல்,உணவருந்துதல்
ஆடை மாற்றுதல்,உறக்கத்துக்கு செல்லுதல்,உறவு
கொள்ளுதல்,மலசல
கூடம் நுழைதல்,வெளியேறுதல்…என
சந்தரப்ப துஆக்களை
கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளை
செய்தல்.
வீட்டில் தொழுகைக்கான சூழலை ஏற்படுத்தல்
يقول صلى الله عليه و سلم: " أفضل
الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة " رواه
البخاري ، الفتح رقم 731
“ஒருவர் தொழும் தொழுகைகளுள்
பர்ளைத்தவிர மற்றயவை
வீடுகளில் தொழப்படுவதே
சிறந்தது”
قال رسول الله صلى الله عليه وسلم: " تطوع
الرجل في بيته يزيد على تطوعه عند الناس،كفضل صلاة الرجل في جماعة على صلاته وحده"
رواه ابن أبي شيبة ، صحيح الجامع
2953 .
“ஒருவர்
ஜமாஅத்தாக
தொழுவது
தனித்துத்
தொழுவதைவிட
எவ்வாறு
சிறந்ததுவோ,அவ்வாறே
ஒருவர்
தனது
ஸுன்னத்தான
தொழுகைகளை
மனிதர்களுக்கு மத்தியில்
தொழுவதை
விட
வீட்டில்
தொழுவது
சிறந்ததாகும்”
قوله صلى الله عليه و سلم "خير صلاة النساء
في قعر بيوتهن"رواه الطبراني، صحيح الجامع 3311.
“பெண்கள் தமது வீட்டின்
உட்புறத்தில்,மையப்பகுதியில்
தொழுவதே சிறந்ததாகும்”
قال رسول الله صلى الله عليه و سلم " لا
يُؤَمُّ الرجل في سلطانه ، ولا يجلس على تكرمته في بيته إلا بإذنه " رواه
الترمذي رقم 2772 .
“ஒருவரது
வீட்டில்
அல்லது
அவரது
அதிகாரமுள்ள
இடத்தில்
பிறர்
அவருக்கு
இமாமத்
செய்யக்
கூடாது….”
வீட்டில் தொழுகை
நேரம்
வருமாயின்
வீட்டிளுள்ளவர்களை அழைத்து
தொழுவிக்கும்
வேலையை
வீட்டுத்
தலைவர்
அல்லது
தலைவி
நிறைவேற்றவேண்டும்.தொழுகையை வீட்டுரிமையாளரே
இமாமத்
செய்ய
வேண்டும்.
தொழகக்கான
இடம்,தொழும்
நேரம்,விஷேட
நிகழ்வுகளில்
தொழுகைக்கான
ஏற்பாடு…என
இதில்
கவனம்
செலுத்த
வேண்டும்.அத்தோடு
இரவு
நேரத்
தொழுகையை
வழமையாக்குவதற்கான ஏற்பாடுகளை
செய்ய
வேண்டும்.
குர்ஆனுடனான தொடர்பு
فال رسول الله صلى الله عليه وسلم : " لا
تجعلوا بيوتكم قبورا ، إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة "
رواه مسلم 1/539
“உங்களது வீடுகளை கப்றுகளாக
மாற்றாதீர்கள்.ஷைத்தான்
ஸுரதுல் பகரா
ஓதும் வீடுகளில்
இருந்து விரண்டோடுகிறான்.”
வீட்டில்
தினமும் ஸுரா
முல்க்,றஹ்மான்,வாகிஆ,துகான்…போன்ற
ஸுராக்களை ஓதுவதுடன்
விர்துகளை ஓதுதல்
என்பதுடன் குர்ஆனை
கற்பதற்கும்,மனனமிடுவதற்குமான
சூழலை ஏற்படுத்தல்.
நோன்பு
”كان
رسول الله صلى الله عليه وسلم يصوم العشر وثلاثة أيام من كل شهر الإثنين والخميس“
“றஸுல்(ஸல்)
அவர்கள்
துல்ஹஜ்ஜின்
ஆரம்பப்
பத்திலும்,ஒவ்வொரு
மாதமும்
மூன்று
தினமும்,திங்களும்
வியாழனும்
நோன்பிருப்பவர்களாக இருந்தனர்”
இந்த
நோன்புகளை
குடும்பமாகவே
நோற்பதற்கான
ஏற்பாடுகளை செய்து எமது வீடடில் ஆன்மீகப் பெறுமானத்தை
ஏற்படுத்த வேண்டும்.
இவை முக்கியமாக
விட்டை ஆன்மீக மயப்படுத்துவதற்காக தரப்படுகின்ற பிரதானமான ஆலோசனைகள்.இவை தவிர
இன்னும் நிறைய விடயங்கள் இது தொடர்பில் பேசப்பட வேண்டியுள்ளது.எமது மஜ்லிஸ்களும்,பெண்களுக்கான
நிகழ்ச்சிகளும் வீடுகளை மையப்படுத்தி அமைவதும் இதில் முக்கியமானது.எமது வீடுகளை
தஃவாவின் மத்திய நிலையங்களாக மாற்றுதல் என்ற எமது தஃவாவின் இலக்கில் வீட்டை ஆன்மீக
மயப்படுத்தல் என்பது பிரதான இடத்தை வகிக்கிறது.
ஆன்மீகம் என்று வரும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய
உளப் போராட்டம் என்ற பகுதி இங்கு பேசப்படவில்லை.அதனை நாம் இதனுடன் தொடர்பு படுத்தி
வேறாக நோக்க முடியும்.எமது வீடுகளை
எளிமையாகவும்,ஆடம்பரமின்றியும்,வீண்விரயமின்றியும்...அமைப்பது உள நோய்களிலிருந்து
தூரப்பட்டு வாழ்வதற்கான சூழலை கொண்டு வரும்.
இது
விடயத்தில்
கவனம்
செலுத்தி
எமது
வீடுகளை
ஆன்மீக
அடித்தளம்
கொண்ட
பரம்பரையின்
அத்திவாரமாக
மாற்றும்
பணி
ஸதகா
ஜாரியாவான
ஒரு
இபாதத்தாகும். ஏனெனில்,இஸ்லாமிய
வாழ்வமைப்பின் பிரதானமான
சிறப்பியல்பு
ஆன்மீகமாகும்.இன்று
எமது
சூழலில்
அது
வரண்டு
போய்க்
காணப்படுகிறது.இதனை
உயிர்ப்பிக்கின்ற பெறும்
பங்கு
வீடுகளுக்கும் பெண்களுக்குமுள்ளது.ஆனால் இன்று
நாம்
அதனை
பள்ளிவாயில்களுக்கும் சமூகத்துக்கும் மாத்திரம்
உரியதாக விட்டு
விட்டு
இருக்கின்றோம்.எனவே
எமது
ஆன்மீகம்
பாதியானதாகவும் வெளிப்படையானதாகவும் பல
போது
போலியானதாகவும் மாத்திரம்
மாறிப்
போயுள்ளது.
சகோதரிகளே!இதனை
மாற்றும்
முதல்
எட்டுக்களை
நாம்
எடுத்த
வைப்போமா?!அது
எமது
ஆன்மீகப்
பண்புள்ள
றப்பானிய
தலைமைகளை
எமக்கு
ஈன்று
தரும்
இன்ஷா
அல்லாஹ்.
No comments:
Post a Comment