Wednesday, December 7, 2016

ஸுஜுதில் ஓத வேண்டிய ஒதல்கள்- எம்.என்.இக்ராம்

ஸுஜுத் உலகில் அடியான் அல்லாஹ்வை நெருங்கியிருப்பதற்கான  சந்தர்ப்பம்.இதனை அல்-குர்ஆன்
"واسجد واقترب " –العلق:19-
ஸுஜுத் செய்து அவனை நெருங்குங்கள்” என குறிப்பிடுகிறது.நபியவர்கள் இது தொடர்பாக அதிகம் வழியுருத்தியுள்ளார்கள்.
 عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : أقرب ما يكون العبد من ربه وهو ساجد ، فأكثروا الدعاء - . رواه أحمد ومسلم وأبو داود والنسائي - .
“அடியான் அல்லாஹ்வை அதிகம் நெருங்கியிருக்கும் சந்தர்ப்பம்,அவன் ஸுஜுதிலிருக்கும் சந்தர்ப்பமாகும்.எனவே,அதிலே அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.”
இங்கு நெருக்கம் என்பதனை,அல்லாஹ் ஸுஜுதில் கேட்கும் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறான் என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.அதனை ஸுரா பகராவின்
أنه قريب بإجابة الدعاء
  وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون - “البقرة : 186 –
“என்னைப் பற்றி எனது அடியான் வினவினால்,நான் சமீபமாக இருந்து பிரார்த்திப்பவிராரத்தனைகளுக்கு பதிலளிக்கின்றேன்….”என்ற வசனத்தை வைத்து விளக்கப்படுகிறது.இதனை பின்வரும் ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.
«وأما السجود فاجتهدوا في الدعاء فقمن أن يستجاب لكم»
“ஸுஜுதைப் பொருத்தவரை நீங்கள் அதில் பிரார்த்தனை செய்ய சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பதிலளிக்கப்படத்தக்க பிரார்த்தனையாகும்”

عن ثوبان قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول : { عليك بكثرة السجود فإنك لن تسجد لله سجدة إلا رفعك الله بها درجة ، وحط بها عنك خطيئة } .رواه أحمد ومسلم وأبو داود .
“நீங்கள் அதிகமாக ஸுஜுத் செய்யுங்கள்,நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒரு ஸுஜுத் செய்தால் அல்லாஹ் உங்களது ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான்.ஒரு தவரை மன்னிக்கிறான்.”
 وروى مسلم في صحيحه أيضاً عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: ((ألا إني نهيت أن أقرأ القرآن راكعاً أو ساجداً، فأما الركوع فعظموا فيه الرب، وأما السجود فاجتهدوا في الدعاء فقمن أن يستجاب لكم))
“அல்-குர்ஆனை ருகூஃவிலும்,ஸுஜுதிலும் ஓதுவது எனக்கு தடுக்கப்பட்டுள்ளது.ருகூ.வை பொருத்தவரை அதில் றப்பை மகத்துவப்படுத்துங்கள். ஸுஜுதைப் பொருத்தவரை நீங்கள் அதில் பிரார்த்தனை செய்ய சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பதிலளிக்கப்படத்தக்க பிரார்த்தனையாகும்
عن ربيعة بن كعب قال : (كنت أبيت مع النبي صلى الله عليه وسلم آتيه بوضوئه وحاجته ، فقال : سلني ، فقلت : أسألك مرافقتك في الجنة ، فقال : أو غير ذلك ؟ فقلت : هو ذاك ، فقال : أعني على نفسك بكثرة السجود (رواه أحمد ومسلم والنسائي وأبو داود .
றபீஆ இப்னு கஃப்(றழி)அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:“நான் நபியவர்களுடன் அவருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு இரவில் தங்கியிருந்தேன்.அச்சந்தர்ப்பத்தில் நபியவர்கள் எனது தேவைகளை அவரிடம் வினவுமாறு கேட்டார்கள்.நான் சுவனத்தில் உங்களுடன் இருக்க விரும்புகிறேன் என்றேன்.வேறு ஏதாவது தேவைகள் உண்டா எனக் கேட்ட போது.அதுதான் எனக்கு தேவை என்றேன்.அதற்கு நபியவர்கள்:அதிகம் ஸுஜுத் செய்து அதற்காக உமக்கு உதவி பெற்றுக் கொள்”என்றார்கள்.
" وحرم الله على النار أن تأكل آثار السجود "-البخاري-
“அல்லாஹ் ஸுஜுதின் அடையாளங்களை நரக நெருப்பு சாப்பிடுவதை ஹராமாக்கியுள்ளான்”
            இங்கு ஸுஜுத் என்பது தொழுகையில் ஸுஜுத் செய்தல்,அதாவது அதிகம் நபிலான வணக்கங்கங்களில் ஈடுபடுவதன் ஊடாக இது சாத்தியப்படுகிறது.எனவேதான் இங்கு அதிக ஸுஜுத்களுக்கான தூண்டுதல் என்பது,அதிக நபிலான தொழுகைகளுக்கான தூண்டுதல் என விளக்கப்படுகிறது.அத்துடன் தொழுகைக்கு புறம்பாக செய்யப்படும் ஸஜ்ததுத் திலாவா,ஸஜ்ததுஷ் ஷுக்ர்…என்பனவும் இங்கு அடங்கும்.
            அதே போல் தொழுகையில் நீண்ட ஸுஜுதா அல்லது கியாமா சிறந்தது என்ற இரு கருத்துக்கள் இந்த விடயம் தொடர்பில் காணப்படுகின்றன.இதில் பெரும்பாலானவர்கள் நீண்ட கியாம் சிறந்தது எனக் கூறுகின்றனர்.ஏனெனில் நபியவர்களது நீண்ட கியாம் பற்றியே ஹதீஸ்கள் வந்துள்ளன அதே போல் நீண்ட குனூத் உடைய தொழுகை சிறந்தது என ஹதீஸ் வந்துள்ளது.எனக் கூறுகின்றனர். எனினும் இந்த இரண்டையும் இணைத்துப் பார்ப்போர் இவை இரண்டும் நீண்டதாக காணப்படுவது சிறந்தது என்கின்றனர்.
            அடுத்து,ஸுஜுதில் எந்த பிரார்த்தனைகளை கேட்பது என்ற விடயம் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.இதனைப் பொருத்த வரை ருகூஃ அல்லாஹ்வை புகழ்வதற்கான இடமாகவும் ஸுஜுத் பிரார்த்திப்பதற்கான இடமாகவும் ஹதீஸினூடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அது தொழுகையாக அமையின் பிரார்த்தனை அறபு மொழியில் அமைவது பொருத்தம்.அடுத்து நபியவர்களால் ஓதப்பட்ட பிரார்த்தனைகளை முதன்மைப்படுத்துவது அவரது ஸுன்னாவைப் பின்பற்றிய நன்மையை தருவதோடு,எமது தேவைகள் அனைத்தையும் பொருத்தமான அமைப்பில் கேட்பதற்கான வாய்ப்பாகவும் அமையும்.அத்தோடு எமது தேவைகள் விருப்பங்களை நாம் தாராளமாக கேட்கலாம்.இதில் தொழுகையில் அறபு மொழியால் கேட்க முடியாதோர் மனதால் தமது மொழியில் அதனை கேட்கலாம் என்ற விதிவிலக்கு காணப்படுகிறது.
            இங்கு பிரார்த்னை எனும் போது அல்லாஹ்வுடனான முனாஜாத் இடம் பெறுவதே முக்கியமானதாகும்.அல்லாஹ்வை நாம் நமது இயலுமையில் நெருங்கும் போது அவனது நெருக்கும் பாரியதாக இருக்கும் என ஹதீஸ் குறிப்பிடுகிறது.அப்படியாயின் ஸுஜுதின் நெருக்கம் எத்தகைய ஒரு அரிய வாய்ப்பு என்பது சொல்லப்பட வேண்டிய அவசியம் இருக்காது.இச்சந்தர்ப்த்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்வதற்காக ஸுஜுதில் நபியவர்கள் ஓதிய பிரார்த்னைகளை கருத்தறிந்து கற்றுக் கொள்வதும் முக்கியமானது.
நபியவர்கள் ஸுஜுதில் ஓதிய பிரார்த்தனைகள்

1.    ( اللهم اغفر ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره ) رواه مسلم .
“யாஅல்லாஹ் எனது அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக.அது மிகவுமே அற்பமானதாய் இருக்கலாம்,பாரியதாக இருக்கலாம்.ஆரம்பத்தில் செய்ததாக இருக்கலாம்,இறுதியாக செய்ததாக இருக்கலாம்.அது பகிரங்கமாக செய்ததாக இருக்கலாம்,இரகசியமாக செய்ததாக இருக்கலாம்”
2.     (سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي) -الصحيحين-
“யாஅல்லாஹ்,எங்கள் றப்பே!நீ தூய்மையானவன்.யாஅல்லாஹ் உனது புகழை முன்னிலைப்படுத்திக் கேட்கிறோம்.எம்மை மன்னிப்பாயாக.”
3.    ( سبوح قدوس رب الملائكة والروح ) -صحيح مسلم-
“அவன் அதிகம் துதிக்கப்படுபவன்,அதிகம் புனிதப்படுத்தப்படுபவன்.அவன் ஜிப்ரீலினதும் மலாஇகாக்களதும் றப்பாக இருக்கிறான்.”
4.    ( اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره فأحسن صوره فشق سمعه وبصره فتبارك الله أحسن الخالقين ) - صحيح مسلم-
“யாஅல்லாஹ் உனக்கு சிரம் பணிந்தோம்(ஸுஜுத் செய்தோம்),உன்னை ஈமான் கொண்டோம்,உனக்கு கட்டுப்பட்டோம்.எனது முகத்தை அதனை படைத்து,செப்பணிட்டு,அதன் தோற்றத்தை அழகுபடுத்தி,அதில் பார்வைப் புலனையும்,கேள்விப் புலனையும் ஏற்படுத்தியவனுக்கு முன் பணியச் செய்கிறேன்.அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பரகத் பொருந்தியவன்.”
5.    (سبحانك وبحمدك لا إله إلا أنت ) - صحيح مسلم-
“நீ தூய்மையானவன்,உனது புகழால்தான் அனைத்தும்,உன்னைத் தவிர வேறு இலாஹ் இல்லை”
6.     (اللهم إني أعوذ برضاك من سخطلك ، وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناءً عليك أنت كما أثنيت على نفسك )-مسلم وأصحاب السنن-
 “யா அல்லாஹ் உனது வெறுப்பிலிருந்து உனது திருப்தியை பாதுகாத்து தருமாறு கேட்கிறேன்.உனது தண்டனையிலிருந்து உனது மன்னிப்பை பாதுகாத்து தருமாறு கேட்கிறேன்.நான் உன்னிடம் உனது கோபத்திலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன்.உன்னை நீ  புகழ்ந்தது போல் என்னால் உனது புகழை கணக்கிட முடியாது.”
7.    عقبة بن عامر الجهني يقول: «لما نزلت {فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ} قال لنا رسول الله صلى الله عليه وسلّم: اجعلوها في ركوعكم، فلما نزلت {سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلاعْلَى} قال: اجعلوها في سجودكم».-أحمد-
“மகத்தான உமது றப்பின் பெயரை துதிப்பீராக” என்ற வசனம் இறங்கியபோது இதனை உங்களது ருகூஃவில் வைத்துக் கொள்ளுங்கள் என றஸுல்(ஸல்)அவர்கள் எமக்கு கூறினார்கள்.“உயர்ந்த உங்களது றப்பின் பெயரை துதியுங்கள்” என்ற வசனம் இறங்கியதும் அதனை உங்களது ஸுஜுதில் வைத்துக் கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.
8.     عن حذيفة-رضي-أن رسول الله –صلعم- كان يقول في سجوده :( سبحان ربي الأعلى) رواه أحمد ومسلم وأصحاب السنن- .
“உயர்ந்த எனது றப்பு தூய்மையானவன்” என நபியவர்கள் ஸுஜுதில் ஓதிவரக்கூடியவர்களாக இருந்தார்கள்.
9.    وأما دعاء( يا مقلب القلوب ثبت قلبي على دينك) ، فقد رواه الترمذي وحسنه عن أم المؤمنين عائشة رضي الله عنها - وقد كان هذا الدعاء أكثر دعائه عليه الصلاة والسلام ولم ينقل والله أعلم - أنه كان يقوله في سجوده - ولو قاله أحد في سجوده فلا حرج عليه لأن السجود موضع دعاء ،
“உள்ளங்களை புரட்டுகிறவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக” என்ற பிரார்த்தனை நபியவர்கள் அதிகம் ஓதிய துஆக்களுள் ஒன்றாகும்.எனினும் இதனை அவர்கள் ஸுஜுதில் ஓதினார்கள் என்ற பதிவு இடம்பெறவில்லை.ஆனாலும் இதனை ஸுஜுதில் ஓதுவதில் எத்தகைய தடையும் கிடையாது.ஏனெனில் ஸுஜுத் பிரார்த்தனைக்குரிய இடமாகும்.
  1. (اللهم اجعل في قلبي نورًا، وفي سمعي نورًا، وفي بصري نورًا، وعن يمينى نورًا، وعن يساري نورًا، وأمامي نورًا، وخلفي نورًا، وفوقي نورًا، وتحتي نورًا، واجعلني نورًا – أو قال واجعل لي نورًا(-مسلم و أحمد-
“யாஅல்லாஹ்!எனது உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது செவியில் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது பார்வையில் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது வலது புறம் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது இடப் புறம் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு முன்னால் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு பின்புறமாக ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு மேலாக ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு கீழாக ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு ஒளியை ஏற்படுத்திவிடுவாயாக.”

  1. رواه النسائي أيضاً عن عوف بن مالك أن الرسول صل الله عليه وسلم كان يقول في سجوده: "سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة". وصححه الألباني.
“ஆட்சியையும், அதிகாரத்தையும், பெருமையையும், மகத்துவத்தையும் சொந்தமாக வைத்திருப்பவன் தூய்மையானவன்”
  1. عن أبي موسى الأشعري - رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - أنه كان يدعو بهذا الدعاء :” اللهم اغفر لي خطيئتي وجهلي ، وإسرافي في أمري ، وما أنت أعلم به مني ، اللهم اغفر لي جدي وهزلي ، وخطئي وعمدي وكل ذلك عندي ، اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني ، أنت المقدم وأنت المؤخر ، وأنت على كل شيء قدير.“ ( متفق عليه )
“யாஅல்லாஹ்!எனது தவறுகளை மன்னிப்பாயாக.எனது அறியாமையை மன்னிப்பாயாக.எனது விவகாரங்களில் ஏற்படும் வீண்விரயங்களை மன்னிப்பாயாக.அவைபற்றி என்னைப் பார்க்கிலும் நீ அறிந்து வைத்திருப்பவையே அதிகம்.யாஅல்லாஹ்!நான் சீரியஸாகவும் பொடுபோக்காகவும் செய்யும் பிழைகள்,நான் தவறுதலாக செய்பவை,வேண்டுமென்றே செய்பவை என என்னிடமிருந்து வருகின்ற அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக.நான் முன்னர் செய்தவை,பின்னர் செய்தவை,இரகசியமாக செய்தவை,வெளிப்படையாய் செய்தவை என அனைத்து பிழைகளையும் பொருத்தருளுவாயாக.அவை பற்றி என்னைப்பார்க்கிலும் நீஅறிந்தவைகளோ அதிகம்.நீயே முற்படுத்துபவன்.நீயே பிற்படுத்துபவன்.நீ சர்வமும் செய்யும் வல்லமை படைத்தவன்.”
அடுத்து, அதிகம் ஸுஜுத் செய்யவும் பிரார்த்திப்பதற்கும் பொருத்தமான பொழுதாக இரவின் இறுதிப்பகுதி காணப்படுகிறது.அச் சந்தர்ப்பத்தை நாம் அதிகம் பயன்படுத்திக் கொள்வோம்.
 (أقربُ ما يكون الرب من عبده، فى جوف الليل الآخر) رواه الترمذي (3579) وهو حديث صحيح
“றப் பு தனது அடியானை மிகவுமே நெருங்கியிருக்கும் தருணம் இரவின் கடைசிப் பகுதியாகும்”

وذلك حين ينزل تبارك وتعالى في الثلث الأخير من الليل، فيقول: «هل من سائل فأعطيه، هل من داع فأستجيب له، هل من مستغفر فأغفر له».
“மாட்சிமை மிக்க றப்பு இரவின் இறுதிப் பகுதியில் கீழ் வானில் இரங்கி வந்து கூறுவான்: என்னிடம் கேட்போர் யாருமிருக்கின்றனரா ?நான் அவர்களுக்கு கொடையளிப்பதற்காக.என்னிடம் பிரார்த்திப்பவர்கள் இருக்கிறார்களா?அவற்றுக்கு பதிலளிக்க.பாவமன்னிப்பு கோருவோர் யாருமிருக்கின்றனரா?அவர்களுக்கு மன்னப்பளிக்க”

            இந்த வகையில் உலகில் அல்லாஹ்வை நெருங்கியிருக்கக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பணன்படுத்தி எம்மை ஆன்மீக ரீதியாக பலப்படுத்திக் கொள்வோம்.அதற்கு எல்லாம் வல்ல றப்பு எமக்கு அருள்புரியட்டும்.

வீட்டை ஆன்மீக மயப்படுத்தல் எம்.என்.இக்ராம்

  مثل البيت الذي يذكر الله فيه ، والبيت الذي لا يذكر الله فيه مثل الحي والميت
அல்லாஹ்வை நினைவு கூறுகின்ற வீட்டுக்கும்,அல்லாஹ்வை நினைவு கூறாமலிருக்கும் வீட்டுக்கும் இடையிலான வித்தியாசம் உயிருள்ளவருக்கும் உயிரற்றவருக்கும் இடையிலான வேறுபாட்டை போன்றதாகும்

வீடு என்பது இஸ்லாமிய சமூக அமைப்பில் மிகப் பிரதானமான இடத்தை வகிக்கிறது.குடும்ப வாழ்வை தனிமனித உருவாக்கம்,சமூகஉருவாக்கம் என்பனவற்றின் அடிப்படையாகவும் அவை இரண்டினையும் ஒன்றிணைக்கும் பிரதான இடமாகவும் இஸ்லாம் பார்ப்பதுதான் இதற்கான பிரதான காரணமாகும்.எனவேதான் ஒருவர் தனது விவகாரத்தில் கவனம் செலுத்துவதுடன் தனது குடும்பத்தையும் கவனிக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ"-التحريم:06-
"ஈமான் கொண்டவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மனிதர்களும் கற்களும் எரிபொருட்களாகக் கூடிய நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்…”
அதே போன்று குடும்பத்தாருக்கு தொழுகையை ஏவுமாறு நபியவர்களைப் பார்த்து குர்ஆன் குறிப்பிடுகிறது.
"وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ"- طه: 132-
"உங்களது குடும்பத்தாருக்கு தொழுமைாறு ஏவுங்கள்.நீங்களும் அதனை பொறுமையாக நிறைவேற்றுங்கள்.உங்களிடம் நாம் வாழ்க்கை வசதியை செய்யுமாறு கேட்கவில்லை.நாம் உமக்கு வாழ்க்கை வசதியளிக்கிறோம்.தக்வாவுக்கே சிறந்த முடிவுள்ளது.”
இந்த வகையில் நபியவர்கள் தனது குடும்பத்தாருக்கு தொழுகையை ஏவுபவர்களாக இருந்தார்கள்
وقال ابن أبي حاتم : حدثنا أبي ، حدثنا عبد الله بن أبي زياد القطواني ، حدثنا سيار ، حدثنا جعفر ، عن ثابت قال : كان النبي صلى الله عليه وسلم إذا أصابه خصاصة نادى أهله : " يا أهلاه ، صلوا ، صلوا " . قال ثابت : وكانت الأنبياء إذا نزل بهم أمر فزعوا إلى الصلاة .
நபியவர்களுக்கு ஏதாவது நிகழ்வுகள் ஏற்பட்டால் குடும்பத்தாரை தொழுகைக்காக அழைப்பார்கள்.இது நபிமார்கள் அனைவரதும் வழக்கமாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
அதே போன்று நபியவர்கள் இரவுத் தொழுகையிலும் தனது மனைவிமாரை பங்கு கொள்ளச் செய்துள்ளதுடன்,அப்படி செய்யுமாறு ஏனையவர்களையும் தூண்டி உள்ளார்கள்.
عن عائشة – رضي الله عنها - قالت : " كان رسول الله صلى الله عليه وسلم ، يصلي من الليل فإذا أوتر قال قومي فأوتري يا عائشة " . رواه مسلم ، مسلم بشرح النووي 6/23
நபியவர்கள் இரவிலே நின்று வணங்குவார்கள்.அவர்கள் வித்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு என்னை எழுப்பி,வித்ர் தொழுமாறு வேண்டுவார்கள்என ஆயிஷா(றழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " رَحِمَ اللَّهُ رَجُلا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى ، وَأَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ ، رَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ ، وَأَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى ، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ " . رواه أحمد وأبو داود ، صحيح الجامع
ஒருவர் இரவில் எழுந்து தொழுகின்றார்,அவர் தனது மனைவியையும் தொழுகைக்காக எழுப்பி அவளும் தொழுகையை நிறைவேற்றுவாள்.அவள் விழிக்க மறுத்தால் அவளது முகத்தில் நீரை தெளித்து எழுப்புவான்.அத்தகைய மனிதனுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும்.ஒரு பெண் இரவில் எழுந்து தொழுகின்றாள்.அவள் தனது கணவனையும் எழுப்பி அவனும் தொழுகையை நிறைவேற்றுகிறான்.அவன் விழிக்க மறுத்தால் அவனது முகத்தில் நீரை தெளித்து எழுப்புவாள்.அத்தகைய பெண்ணுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும்.”
இவ்வாறு நோக்கும்போது குடும்பமும் வீடும் ஆன்மீக ரீதியாக ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை விளங்குகின்றோம்.அதே நேரம் இந்த விடயத்தில் பிரதான பங்கு வீட்டுத் தலைவனான ஆணுக்குத்தான் உள்ளது என்பதனை மேலுள்ள அல்-குர்ஆன் வசனங்களிலிருந்தும்,ஹதீஸ்களில் இருந்தும் விளங்குகின்றோம்.இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
 قال صلى الله عليه وسلم : " إن الله تعالى سائل كل راع عما استرعاه أحفظ ذلك أم ضيعه ، حتى يسأل الرجل عن أهل بيته "
அல்லாஹ் ஒவ்வோர் மனிதனுதும் பொருப்புக்களை அவன் சரியாக நிறைவேற்றினானா அல்லது அதனை வீணாக்கினானா என்பது குறித்து விசாரிக்கப்படும்.அது எது வரை எனின்,ஒரு மனிதர் தனது வீட்டார் குறித்தும் விசாரிக்கப்படுவார்
 இது பிரதானமாக குடும்பத்தலைவனுடைய பொருப்பாக இருந்தாலும் அதனை ஒழுங்கு படுத்துவதில் பெண்களாகிய எமக்கு பெறும் பங்கு உள்ளது என்பதனை அல்லாஹ் அருள் புரிந்த பெண் தொடர்பாக வரும் ஹதீஸ் குறிப்பிடுகிறது.
 அந்த வகையில் எமது வீடுகளை ஆன்மீக ரீதியாக ஒழுங்கு படுத்தி,அதனை பேணுவதில் பெண்களாகிய எமக்கு பெறும் பங்கு உள்ளது.இது எமது குடும்ப அங்கத்தவர்களது ஆன்மீக வாழ்விலும்பெறும் பங்கு வகிக்கின்றது என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.எமது வீட்டு சூழலில் முக்கியத்துவமளிக்கப்படும் விடயங்கள்தான் எமது சந்ததிகளின் வாழ்விலும் முக்கியத்துவமிக்கதாகக் காணப்படும்.ஆன்மீகப் பெறுமானத்துக்கு உரிய முக்கியத்துவம் எமது வீட்டு சூழலில் கொடுக்கப்படும் போது அதற்கு முக்கியத்துவமளிக்கும் சந்ததியை நாம் எமது வீடுகளில் இருந்து உருவாக்கலாம்.
எமது வீடுகளை எப்படி ஆன்மீக மயப்படுத்துவது?
சுத்தமும் ஒழுங்கும்
 ஆன்மீகம் எனும் போது முதலில் சுத்தத்துக்கும் ஒழுங்குக்கும் பிரதான பங்கு உள்ளது.ஒரு வீடு ஆன்மீக ரீதியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது என்பதன் பிரதான வெளிப்பாடு,அந்த வீடும் அதிலுள்ளவர்களும் சுத்தத்தை பேணுகிறார்கள் என்பதாகும்.
عن أبي مالك الحارث بن عاصم الأشعري رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( الطهور شطر الإيمان ، والحمد لله تملأ الميزان ، وسبحان الله والحمد لله تملآن - تملأ - ما بين السماوات والأرض ، والصلاة نور ، والصدقة برهان ، والصبر ضياء ، والقرآن حجة لك أو عليك ، كل الناس يغدو ، فبائع نفسه ، فمعتقها أو موبقها ) رواه مسلم .
சுத்தம் ஈமானின் பாதியாகும்,அல்லாஹ்வை புகழ்வது மீஸானை நிரப்புகிறது.அல்லாஹ்வை துதிப்பதும் புகழ்வதும் வானம் பூமிக்கு இடைப்பட்ட இடைவெளியை நிரப்புகிறது.தொழுகை ஒளியாகும்.ஸதகா ஆதாரமாகும்.பெறுமை ஒளியாகும்.குர்ஆன் உங்களுக்கு சார்பான ஆதாரமாக அல்லது எதிரான ஆதாரமாக இருக்கும்.ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்து சென்று தன்னை விற்பனை செய்கிறான்.அதில் ஒருவர் தன்னை நரகிலிருநு்து விடுதலை செய்து கெள்கிறார் அல்லது நரகில் சிறைப்படுத்திக் கொள்கிறார்
   இங்கு ஆன்மீக செயற்பாடுகளாக நாம் கருதும் திக்ர், அவ்ராதுகள், தொழுகை, ஸதகா, குர்ஆனுடனான உறவு….மனப்போராட்டம் என்பன சுத்தத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது மாத்திரமன்றி,சுத்தம் அவை அனைத்துக்கும் முதன்மையாக பேசப்பட்டுள்ளது.
  தொழுகை போன்ற இன்னும் பல இபாதத்களை நிறைவேற்றுவதற்கான முக்கிய ஷர்த்தாக சுத்தம் காணப்படுவதனை காண்கிறோம்.அதேபோன்று பள்ளிவாயில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது போல் அதில் நுழைபவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என ஷரீஆ குறிப்பிடுகிறது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக இபாதத்கள் மனிதனை சுத்தப்படுத்துகிறது என இஸ்லாம் கருதுகின்றது.

…”فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ"-التوبة:108-
பள்ளிவாயில்களிலே தம்மை தூய்மைப்படுத்திக் கொள்ள விரும்புகின்ற மனிதர்கள்தான் இருக்கின்றார்கள்.அல்லாஹ் தம்மை தூய்மைப்படுத்திக் கொள்பவர்களை விரும்புகிறான்.”
 அதைப் பார்க்கிலும் மிகவும் முக்கியமான ஒரு விடயம் குடும்ப வாழ்வு சில இமாம்களின் கருத்துப்படி நேரடியான இபாதத்களுடன் சேர்த்துப் பார்க்க வேண்டிய ஒரு இபாதத்தாகும்.பிக்ஹிலே திருமணம் தொடர்பான சட்டங்கள் இபாதத் சார்ந்தாதாக பார்க்கப்பட வேண்டுமா அல்லது பொருளாதார கொடுக்கள் வாங்கள் நடவடிக்கை சார்ந்து பார்க்கப்பட வேண்டுமா என்ற ஒரு வாதம் இருக்கிறது.இதில் ஒவ்வொருவரும் எடுக்கும் நிலைப்பாட்டைப் பொருத்து குடும்ப வாழ்வின் சட்டங்களை அவர்கள் பார்க்கும் விதமும் வித்தியாசப்படுகிறது.
 இங்கு இதனை இபாதத் சார்ந்து பார்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகமாகக் காண்கிறோம்.கணவன் மனைவி உறவு ஹதீஸ்களில் இபாதத்தாக குறிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு நன்மை கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 அந்த வகையில் குடும்ப வாழ்வு என்ற இபாதத் நிறைவேற்றப்படுகின்ற இடமான வீடு சுத்தமாக இருக்க வேண்டும் எனக் காண்கிறோம்.அப்போதுதான் அங்கு மலக்குகள் வருவார்கள்,ஷைத்தான்கள் வரமாட்டார்கள்.குடும்பங்களில் பிரச்சினைகளும் விரிசல்களும் குறையும்.
"من أراد أن يلقى الله طاهرا ومطهرا فليتزوج الحرائر"
யார் அல்லாஹ்வை தூய்மையாகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நிலையிலும் சந்திக்க விரும்புகிறாறோ அவர் நல்ல பெண்களை திருமணம் செய்து கொள்ளட்டும்என்ற ஹதீஸும் குடும்ப வாழ்வும் வீடும் ஒருவரை சுத்தப்படுத்தும் இடம்.எனவே,அது சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை சுட்டுகிறது.அதாவது ஒவ்வொரு வீடும் ஒரு பள்ளி வாயிலாக இருக்க வேண்டும்.
 இதனை பெண்கள் வீட்டில் தொழுவதன் சிறப்பு சம்பந்தமாக குறிப்பிடும் ஹதீஸும்,நபியவர்கள் வீடடை ஜமாஅத் நடத்துமிடமாக சில சந்தர்ப்பங்களில் கொண்டமையும் குறிப்பிடுகிறது.அது மாத்திரமன்றி மூஸா (அலை) நோக்கி
وأوحينا إلى موسى وأخيه أن تبوءا لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنينسورة يونس الآية 87
நீங்கள் உங்கள் வீட்டை தொழுமிடமாகக் கொள்ளுங்கள்…” என்ற விடயமும் இதனைக் குறிப்பிடுகிறது.
 அதுபோன்று ஒருவர் தொழும் தொழுகைகளுள் பர்ளைத்தவிர மற்றயவை வீடுகளில் தொழப்படுவதே சிறந்தது என்ற நபியவர்களின் வழிகாட்டலும் இதனைக் குறிப்பிடுகிறது.
يقول صلى الله عليه و سلم: " أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة " رواه البخاري ، الفتح رقم 731
இந்த வகையில் எமது வீடகளை சுத்தமும்,நேர்த்தியும் ஒழுங்கும்,அமைதியும் கொண்ட பள்ளி வாயில்களாக மாற்றுவது வீட்டை ஆன்மீக மயப்படுத்துவதில் பிரதான இடத்தை வகிக்கிறது.
வீட்டில் சந்தர்ப்ப துஆக்களையும் ஆன்மீக ஓழுங்குகளையும் பேணுதல்
روى مسلم في صحيحه أن رسول الله صلى الله عليه وسلم قال :" إذا دخل الرجل بيته فذكر اسم الله تعالى حين يدخل وحين يطعم ، قال الشيطان : لا مبيت لكم ولا عشاء هاهنا ، وإن دخل فلم يذكر اسم الله عند دخوله قال :أدركتم المبيت ،وإن لم يذكر اسم الله عند مطعمه قال : أدركتم المبيت والعشاء " . رواه الإمام احمد ، المسند 346:3 ، و مسلم 1599:3
ஒருவர் வீட்டில் நுழைந்தால்,அவர் நுழையுமு் போதும்,சாப்பிடும் போதும் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர்ந்தால் ஷைத்தான்:இன்று உங்களுக்கு இங்கு உணவும் கிடையாது,இரவு தங்கவும்முடியாது.என்று கூறுவான் அவர் நுழையும் போது,அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறாதுவிடின்,இன்று உங்களுக்கு தங்கலாம் என ஷைத்தான் கூறுவான்.சாப்பிடும் போது அல்லாஹ்வின் பெயரை கூறாது விடின் இன்று இரவுச் சாப்பாடுமுள்ளது,நீங்கள் தங்கவும் முடியும் என்பான்.”
روى الإمام مسلم في صحيحه عن عائشة – رضي الله عنها – قالت : " كان رسول الله صلى الله عليه و سلم ، إذا دخل بيته بدأ بالسواك " رواه مسلم كتاب الطهارة باب 15 رقم 44
நபியவர்கள் வீட்டில் நுழைந்தால் முதலில் பல் துலக்குவார்கள்
இதே போன்று வீட்டில் இருந்து வெளியே செல்லுதல்,உணவருந்துதல் ஆடை மாற்றுதல்,உறக்கத்துக்கு செல்லுதல்,உறவு கொள்ளுதல்,மலசல கூடம் நுழைதல்,வெளியேறுதல்என சந்தரப்ப துஆக்களை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
வீட்டில் தொழுகைக்கான சூழலை ஏற்படுத்தல்
 يقول صلى الله عليه و سلم: " أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة " رواه البخاري ، الفتح رقم 731
ஒருவர் தொழும் தொழுகைகளுள் பர்ளைத்தவிர மற்றயவை வீடுகளில் தொழப்படுவதே சிறந்தது
قال رسول الله صلى الله عليه وسلم: " تطوع الرجل في بيته يزيد على تطوعه عند الناس،كفضل صلاة الرجل في جماعة على صلاته وحده" رواه ابن أبي شيبة ، صحيح الجامع 2953 .
ஒருவர் ஜமாஅத்தாக தொழுவது தனித்துத் தொழுவதைவிட எவ்வாறு சிறந்ததுவோ,அவ்வாறே ஒருவர் தனது ஸுன்னத்தான தொழுகைகளை மனிதர்களுக்கு மத்தியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது சிறந்ததாகும்
قوله صلى الله عليه و سلم "خير صلاة النساء في قعر بيوتهن"رواه الطبراني، صحيح الجامع 3311.
பெண்கள் தமது வீட்டின் உட்புறத்தில்,மையப்பகுதியில் தொழுவதே சிறந்ததாகும்
قال رسول الله صلى الله عليه و سلم " لا يُؤَمُّ الرجل في سلطانه ، ولا يجلس على تكرمته في بيته إلا بإذنه " رواه الترمذي رقم 2772 .
ஒருவரது வீட்டில் அல்லது அவரது அதிகாரமுள்ள இடத்தில் பிறர் அவருக்கு இமாமத் செய்யக் கூடாது….”
வீட்டில் தொழுகை நேரம் வருமாயின் வீட்டிளுள்ளவர்களை அழைத்து தொழுவிக்கும் வேலையை வீட்டுத் தலைவர் அல்லது தலைவி நிறைவேற்றவேண்டும்.தொழுகையை வீட்டுரிமையாளரே இமாமத் செய்ய வேண்டும்.
 தொழகக்கான இடம்,தொழும் நேரம்,விஷேட நிகழ்வுகளில் தொழுகைக்கான ஏற்பாடுஎன இதில் கவனம் செலுத்த வேண்டும்.அத்தோடு இரவு நேரத் தொழுகையை வழமையாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குர்ஆனுடனான தொடர்பு
فال رسول الله صلى الله عليه وسلم : " لا تجعلوا بيوتكم قبورا ، إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة " رواه مسلم 1/539
உங்களது வீடுகளை கப்றுகளாக மாற்றாதீர்கள்.ஷைத்தான் ஸுரதுல் பகரா ஓதும் வீடுகளில் இருந்து விரண்டோடுகிறான்.”
வீட்டில் தினமும் ஸுரா முல்க்,றஹ்மான்,வாகிஆ,துகான்போன்ற ஸுராக்களை ஓதுவதுடன் விர்துகளை ஓதுதல் என்பதுடன் குர்ஆனை கற்பதற்கும்,மனனமிடுவதற்குமான சூழலை ஏற்படுத்தல்.
நோன்பு
”كان رسول الله صلى الله عليه وسلم يصوم العشر وثلاثة أيام من كل شهر الإثنين والخميس“
றஸுல்(ஸல்) அவர்கள் துல்ஹஜ்ஜின் ஆரம்பப் பத்திலும்,ஒவ்வொரு மாதமும் மூன்று தினமும்,திங்களும் வியாழனும் நோன்பிருப்பவர்களாக இருந்தனர்
இந்த நோன்புகளை குடும்பமாகவே நோற்பதற்கான ஏற்பாடுகளை செய்து எமது வீடடில் ஆன்மீகப் பெறுமானத்தை ஏற்படுத்த வேண்டும்.
 இவை முக்கியமாக விட்டை ஆன்மீக மயப்படுத்துவதற்காக தரப்படுகின்ற பிரதானமான ஆலோசனைகள்.இவை தவிர இன்னும் நிறைய விடயங்கள் இது தொடர்பில் பேசப்பட வேண்டியுள்ளது.எமது மஜ்லிஸ்களும்,பெண்களுக்கான நிகழ்ச்சிகளும் வீடுகளை மையப்படுத்தி அமைவதும் இதில் முக்கியமானது.எமது வீடுகளை தஃவாவின் மத்திய நிலையங்களாக மாற்றுதல் என்ற எமது தஃவாவின் இலக்கில் வீட்டை ஆன்மீக மயப்படுத்தல் என்பது பிரதான இடத்தை வகிக்கிறது.
ஆன்மீகம் என்று வரும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய உளப் போராட்டம் என்ற பகுதி இங்கு பேசப்படவில்லை.அதனை நாம் இதனுடன் தொடர்பு படுத்தி வேறாக நோக்க முடியும்.எமது வீடுகளை எளிமையாகவும்,ஆடம்பரமின்றியும்,வீண்விரயமின்றியும்...அமைப்பது உள நோய்களிலிருந்து தூரப்பட்டு வாழ்வதற்கான சூழலை கொண்டு வரும்.

இது விடயத்தில் கவனம் செலுத்தி எமது வீடுகளை ஆன்மீக அடித்தளம் கொண்ட பரம்பரையின் அத்திவாரமாக மாற்றும் பணி ஸதகா ஜாரியாவான ஒரு இபாதத்தாகும். ஏனெனில்,இஸ்லாமிய வாழ்வமைப்பின் பிரதானமான சிறப்பியல்பு ஆன்மீகமாகும்.இன்று எமது சூழலில் அது வரண்டு போய்க் காணப்படுகிறது.இதனை உயிர்ப்பிக்கின்ற பெறும் பங்கு வீடுகளுக்கும் பெண்களுக்குமுள்ளது.ஆனால் இன்று நாம் அதனை பள்ளிவாயில்களுக்கும் சமூகத்துக்கும் மாத்திரம் உரியதாக விட்டு விட்டு இருக்கின்றோம்.எனவே எமது ஆன்மீகம் பாதியானதாகவும் வெளிப்படையானதாகவும் பல போது போலியானதாகவும் மாத்திரம் மாறிப் போயுள்ளது. சகோதரிகளே!இதனை மாற்றும் முதல் எட்டுக்களை நாம் எடுத்த வைப்போமா?!அது எமது ஆன்மீகப் பண்புள்ள றப்பானிய தலைமைகளை எமக்கு ஈன்று தரும் இன்ஷா அல்லாஹ்.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...