Friday, October 4, 2013

பிறை விவகாரம்-நாம் எப்படிப் பார்க்க வேண்டும்,தலைமை எப்படி நடக்க வேண்டும்?

August 8, 2013 at 6:27pm
அதிகாலை ஸஹர் நேரம் முதல் தொலைபேசி அழைப்பு:சேர் ஊர்ல ஒரே குழப்பமாய் உள்ளது நோன்பு பிடிக்க முடியுமா? இது கிழக்குக்கு வெளியில் இருந்து வந்த ஓர் அழைப்பு...ஆம் கட்டாயம் பிடிக்கத்தானே வேண்டும் இதில் தலைமையின் முடிவுதான் முடிவு...அந்த நேரம் முதல் நோன்பை விடவா என கேட்டு வந்த எனது மாணவியர் முதல் சகோதரர்கள் அனைவரதும் அழைப்புகளுக்கெல்லாம் எனது பதில் அதுவாகத்தான் இருந்தது...எனக்கு பக்கத்தில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட வண்ணம் சுபஹுக்கு பின்னர் வந்தார்...அவர் வரும் போதே விடயம் என்னவென்று தெரியும்...நான் மிகவும் நிதானமாக வெளியே சென்றேன்...அவர் என்ன நிலைப்பாடு என்றார்...தலைமையின் முடிவுதான் முடிவு என்றேன்...கிண்ணியாவில் கொண்டாடுகிறார்களாமே....அது அவரகளது முடிவு...நாம் தலைமையை பின்பற்றுவதுதான் ஷரீஆ என்றேன்...அவர் கோபவயப்பட்டவராக...நீங்க என்ன பொது மகனுக்கு சொல்வதை சொல்கிறீர்கள்...என்றார்...இல்லை,இந்த விடயத்தில் ஷரீஆ அணுகுமுறையைத்தான் சொல்கிறேன் என்றேன்...பிறகு நீண்ட உரையாடலில்...ஜம்இய்யா இதனை சமூகத்துக்கு விளக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் அவர் விடை பெற்றார்.
      ழுஹர் தொழுகை முடிந்து பள்ளிக்கு வெளியே உரையாடல்....சிலர் இன்று நோன்பு பிடிப்பது ஹராம் என்றனர்...நான் கேட்டேன்...நீங்கள் அதனை எப்படி தீர்மானிப்பீர்கள்?...காலையில் வந்த நண்பர் சொன்னார்...நோன்பை விட்டவர்களை பிழை சொல்ல முடியாதென...இல்லை அவர்கள் விட்டால் பிழை...இது தலைமை எடுக்கும் முடிவுதான்...வேண்டுமென்றால் தலைமை இப்போது எமது முடிவு பிழை நீங்கள் நோன்பை விடுங்கள் என்றால் விடலாம்...இல்லாத போது முடியாது என்றேன்...
   இங்கு நான் சொல்ல வந்த விடயம் நாம் பொதுமகனாய் எப்படி விடயத்தை பார்க்க வேண்டும் என்பதனைத்தான்...இப்படியான விவகாரங்களில் தலைமையின் முடிவினையே நாம் பின்பற்ற வேண்டும்.இத்தகைய விவகாரங்களில் தலைமைதான் முடிவெடுக்கும் தனிமனிதர்களல்ல...தனிமனிதர்கள் முடிவெடுத்தால்...வீட்டுக்கு வீடு பெருநாளும் நோன்பும் வித்தியாசப்படும்...தலைமை இதில் தவறு இழைக்கழாமா என்றால் நிச்சயம் சாத்தியம் உண்டு...ஆனால் அதற்காய் தலைமையை தூக்கி எறிந்துவிட முடியாது...நஸீஹத் செய்யலாம்..கட்டுப்படுவதுடன் இணைந்து அது நடக்க வேண்டும்...இந்த விவகாரம் -மஃஸியா-என்ற வட்டத்தில் வருவதல்ல...இது இஜ்திஹாதில் வரும் தவறு...இதில் கட்டுப்படுவதில் தவறு கிடையாது...மாற்றமாக கட்டுப்படாதிருப்பதே பாவம்...
    நாம் இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விடயம் நாம் உம்மதுத்தஃவா -தஃவா சமூகம்...நாம் வெறும் உம்மதுர்ரஹபனா-கிரியைகள் புரியும் துறவுச்சமூகமல்ல...நாம் இஸ்லாத்தை கிரியை கண்ணோட்டத்தல் மாத்திரம் பார்ப்பதே நிறைய நாம் குழம்பிப் போவதற்குக் காரணம்...என்னிடத்தில இவ்விவகாரத்தில் தெளிவு கேட்டவர்களுள்...ஆன்மீகம் மிகைத்த ஒருவர் நோன்பை விட்டதாகச் சொன்னார்...நிச்சயமாய் அவர் விடுவார் ஏனெனில் அவரில் இஸ்லாத்தை அப்படிப்பார்க்கும் போக்கே மிகைத்துள்ளது...தலைமை-கட்டுப்பாடு -ஷுறா -இஜ்மா-நஸீஹத்...இவை எல்லாம் இஸ்லாத்தை சமூகமாய்,தஃவாவாய் பார்க்காதவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை...
   இங்கு தலைமைக்கு கட்டுப்படுவதுதான் இபாதத் என்பதை பலருக்கு விளங்குவது கடினம்...அதற்கு மாறு செய்வதுதான் பாவம் என்பதை விளங்குவது கடினம்...எனவே இஸ்லாம் பற்றிய எமது பார்வை மாறவேண்டியுள்ளது...இந்தப் பெருநாள் வெறும் தொழுகையல்ல தூது-குர்ஆன் கிடைத்தமையை கொண்டாடுதல்...தூதுக்காய் உழைப்பவன் சற்று களைப்பாறுதல்....இந்த உண்மையை சமூகம் விளங்குமா?!
..................................................................................
  அடுத்து இந்த விவகாரத்தை தலைமை எப்படி கையாண்டிருக்கலாம்?
    இந்த விடயத்தை ஒரு பிரதேச சமூகமும் அதன் தலைமைகளுமே உருதிப்படுத்தும் வேலையில் எமது நிபந்தனைகளில் இருந்து வெளியில் சென்று அதனை நீண்ட கலந்துரையாடலுக்கு உற்படுத்தி அழகான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும் என்பது இந்த விவகாரத்தின் இரு பகுதியையும் பாரக்கும் போது கிடைக்கின்ற பதில்...யாரும் தவறு விடலாம் என்ற வகையில் இந்த இடத்தில் நாம் தவறிவிட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது...
...அடுத்து இந்த விவகாரத்தை நேற்று இரவே விளக்கியிருக்கலாம் எனினும் பிந்தியாவது நீண்ட தாமதமின்றி விளக்கியது சிறந்தது
....ஆனால்,அது தலைமையொன்றின் நிதானமான விளக்கமாக அமையாமை கவலையை தந்தது.
....தலைமை எப்போதும் நிதானமாய் விவகாரங்களை அணுக வேண்டும்...இந்த உறையை கேட்ட போது எனக்கு பல வருடங்களாக பழக்கப்பட்ட ஒருவரின் தொணி நினைவில் வருவதை தவிர்க்க முடியாமல் இருந்தது...இதனை எனது நண்பர் ஒருவரும் பதிவொன்றில் குறித்திருந்தார்...அந்தத் தொணி 200,300 மாணவர்களுக்கு சரிவரலாம்..அதுவும் இன்று வழக்கொழிந்து விட்டது...ஆனால் ஒரு சமூகத்தை வழிநடாத்த பயன் தரமாட்டாது...
....ஜம்இய்யாவுக்கு தனது கிளைகளுடன் எவ்வளவு சரியான தொடர்புள்ளது என்ற கேள்வி இங்கு எழுவதை தவிர்க்க முடியவில்லை...ஒரு கிளையின் தலைவர் அதுவும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசக்கிளையின் தலைவர் யாரென் தேசியத் தலைவருக்கு தெரியாதிருப்பது வருந்தத்தக்கது...
....நான் என்ற தோறனையில் பேச்சு அமைந்தமை காட்டமாக இருந்தது...குர்ஆன் கூட அப்படிப் பேசுவதில்லை..நாம் குர்ஆனிய மாதத்தின் இருதியில் இருக்கிறோம் ...அதன் அணுகுமுறை எம்மில் சிறு சாயலையாவது காட்டியிருக்க வேண்டும்...
...யாரும் என்னை விமர்சித்தது கிடையாது...என்ற தோரனையில் பேச்சு இருந்தது...யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்லர்...இதில் நாம் முன்மாதிரியாய் அவற்றை ஏற்கத் தெரிய வேண்டும்..
....அடுத்து விளக்கம் தேவைப்பட்ட விடயம் பேசப்படவில்லை...இது எமது உலமாக்களது முன்வைப்பு முறையிலுள்ள பெரும் குறைபாடு....இதன் விளைவுகளை கடந்த காலங்களில் நன்றாகவே அணுபவித்தோம்...
....கிண்ணியாவில் என்ன நடந்தது?அது பற்றிய நிலைப்பாடு என்ன? நாம் இதனை எப்படி அணுக வேண்டும்?இதில் எம்மிலும் பிழை நேர்ந்திருக்க வாய்ப்புள்ளது...என்று அழகாக விடயத்தை விளக்கியிருக்கலாம்...ஆனால,அவர் பேசிய சில வாரத்தைகள் கண்டிக்கத்தக்கது..சுனாமியில் நாங்க தேவை இதற்கு தேவையில்லையா என்ற தொணி மனதுகளை புண்படுத்துவதாய் இருந்தது...அங்குள்ள சகோதரர்களும் வேண்டாம் பிள்ளைத்தனமாக இவ்விவகாரத்தை அணுகவில்லை...அவர்களது அணுகுமுறையிலும் நியாயமுள்ளது...எனவே எல்லோருக்குமான தலைமை விடயங்களை கவனமாய் அணுக வேண்டும்
.....இது எனது நஸீஹத்கள்...சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு செல்ல வேண்டிய இத் தருணத்தில் கவனமாய் நடக்க வேண்டியுள்ளது...இது சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தை வேறருக்கும் சூழ்ச்சிகளின் உச்ச தருணம் ...எனவே நாம் இணைவுகளை நோக்கி சமூகத்தை கவனமாய் வழி நடாத்த வேண்டும்

1000 பாடசாலை திட்டத்தில் முஸ்லிம் தனித்துவ பாடசாலைகளின் நிலை யாது?


July 17, 2011 at 11:41am
ஆரம்பப்பாடசாலை,இடைநிலைப்பாடசாலை,உயர்தரப்பாடசாலை என பொதுவாக பாடசாலைகள் பிரிக்கப்படப்போவதாக கூறுகிறார்கள். இதன் போது தெற்கில் சிதறிய அமைப்பில் காணப்படும் முஸ்லிம் மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு போகவேண்டிய நிலை வந்தால் அதன் சாதக பாதகங்கள் யாது?..... இங்கு அரசின் இந்த திட்டத்தில் நிறைய நலன்கள் உள்ளன..நாம் முஸ்லிம்கள் என்ற வகையில்தான் கலாச்சார சிக்கல்கள் காணப்படுகின்றன.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகளின் போது கூட பல பயிற்றுவிப்பாளர்களால் எமது கலாசார விடயங்கள் கேலி செய்யப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.இந்த நிகழ்வுகள் முன்னெடுப்புக்களில் இருந்து அரசு தான் ஏலவே சொன்ன தேசிய கல்விக்கொள்கை ஒன்றை கட்டியெழுப்ப விரும்புகிறது என விளங்குகிறது. மேற்கின் திறந்த கலாசாரத்தினடியாக கட்டியெழுப்பப் பட்டுள்ள கல்வித்திட்டத்தைப் பார்க்கிலும் இது சிறந்ததுதான்.எனினும் சிறுபான்மையான நாம் இயன்றவரை நமது தனித்துவத்தை பேணவேண்டியுள்ளது.
எனவே நமது உரிமைப்போராட்டங்களை வெறும் பெயர்களுக்கும் வெளித் தோற்றங்களுக்குமான போராட்டமாக அல்லாமல் பண்புகள் ,பெறுமானங்கள்,சிந்தனைகளுக்கான போராட்டங்களாக மாற்றலாம்.இதில் நாம் இன அடையாளங்களுக்கு அப்பாலும் பலரை இணைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, இங்கு பாடசாலை மறுசீரமைப்பில் முஸ்லிம் பெயர்தாங்கிய ஆண் பெண் கலவன் பாடசாலைகளை தக்கவைக்க போராடுவதை விட்டு விட்டு இஸ்லாத்தின் பெறுமானத்தை வைத்து ஆண் பெண் வேறு வேறாக கற்கும் நிலையை உருவாக்கப் போராடலாம். பல்கழலைக்கழக பயிற்சிகளிலும் இதே விடயத்தையே முன் கொண்டு செல்வது சிறந்தது.
இப்படி நிறைய விடயங்களை சிந்திக்க வேண்டிய சூழலே முன்னால் வருகிறது.வேறுமனே பெயர்களுக்காகவும் வெளித் தோற்றங்களுக்காகவும் போராடி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு,போராடிப் பெற்ற பெயர்களை வைத்து எமது பெறுமானங்களை பேணிக் கொள்ள முடியாமல் சீரழிவதை விட பெறுமானங்களை வென்றெடுக்கும் நேர்மையான சக்தியாக முஸ்லிம்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோம் உண்மையில் முஸ்லிம் என்பவன் இனத்தால் அல்ல பண்பாலே அடையாளப் படுத்தப்பட வேண்டியவன்.

ஹலால் அடுத்து என்ன?


   நாம் இந்தப் பத்தியில் அடுத்து இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எவ்வாறு பேசுவது என்பது தொடர்பில் சில விடயங்களை பரிமார இருந்தோம்.எனினும் அதற்கு முன்னர் மிகவும் சூடேற்றப்பற்று தமக்கேற்றாற் போல் தணிக்கப்பட்ட ஹலால் தொடர்பில் சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம் என எண்ணுகிறோம்.
    இந்த விடயம் தொடர்பாக நாம் மிகத் தெளிவாக பிற சமுகத்திற்கு சொல்வதில் வெற்றி பெற்றோமா?இந்த விடயத்தை கையாள்வதில் ஒரு திட்டமிட்ட அணுகு முறையில் நகர்ந்தோமா?என எழுகின்ற பல கேள்விகளுக்கு அப்பால் நாம் இப்போது உருவாகியுள்ள சூழலை எவ்வாறு சாதகமாய் எதிர்கொள்வது என்பதனை நன்கு திட்டமிட வேண்டியுள்ளோம்.
  நாம் முதலிலேயே தெளிவாகவும் சகல தரப்பு சார்ந்தும் திடமான ஒரு நகர்வை செய்திருந்தால் இந்த விவகாரத்தை நாம் வேறு திக்கில் நகர்த்தியிருக்க முடியும்.எம்மை நோக்கிய எதிர்ப்பை எம்முடனான மோதலை வேறு புள்ளியை நோக்கி நகர்தியிருக்க முடியும்.எனினும் நமது உரையாடலை ஒரு சில தரப்புடன் சுருக்கிக் கொண்டோம்.ஒரு கோண அணுகுமுறையே எம்மை பொறிக்குள் சிக்குண்ட வைத்ததுவோ என சிந்திக்கத் தோன்றுகின்றது.
   முதலில் ஹலால் சான்றிதலால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை தெளிவாகவும் விஞ்ஞான புர்வமாகவும் சொல்லுங்கள் அதனை நிவர்த்திப்பது தொடர்பில் நாம் சிந்திக்கலாம் என கோரியிருக்கலாம்.
    1-பன்சலைக்கு கொண்டு போக முடியாது-நாம் படையல் செய்வதில்லை,நாம் பெயர் கூறி அறுப்பது மிருகங்களை அதனை நீங்கள் கொண்டு போவதில்லையே.....
  2- பணம் சார் விடயத்தை மிகத் தெளிவாக பொது மக்களுக்கு விளக்கியிருக்கலாம்...
3-ஹலால் சான்றிதல் சமூகத்தை சேர்ந்து வாழ வைக்கிறதே தவிர பிரிக்கவில்லை...அது இல்லாத போது முஸ்லிம் சமூகம் அதன் முக்கியத்துவத்தை உணருகின்ற படியால் தெளிவற்ற நிறையவற்றை தவிர்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படும்.இதனால் சகஜமான வாழ்வில் பாதிப்பேற்படும்...
4-ஹலால் இலட்சினை பொறிக்கப்பட்டது பௌத்தத்தில் தடை என எங்காவது உள்ளதா?
    இப்படி பல கோணங்களில் பொது மக்களை மையப்படுத்தி எமது கருத்துக்களை நகர்த்தியிருக்க முடியும்.ஆனால் BBS தமது வதந்திகளை பரப்ப பொது மக்களையும் ஊடகங்களையும் நோக்காய் கொண்டிருந்த வேளை நாம் குறித்த ஒரு தரப்பை மூடிய நிலையில் சந்திப்பதையே நகர்வாய் கொண்டிருந்தோம்..பின்னர் இன் நிலையில் சிறு மாற்றம் வந்த போதும் நிலமை கை தவறிச் சென்றிருந்தது.எமது இலககு பொது மக்களை நோக்கி இன்னும் திரும்பவில்லை.
    அடுத்த நகர்வாய் ஹலால் இலட்சினையை தற்காலிகமாக கொந்தளிப்பை காரணம் காட்டி முழுமையாக அதனை உடனடியாக நிறுத்தியிருக்க முடியும்.இதனால் பிரச்சினையை இன்னோர் புள்ளிக்கு நகர்த்தியிருக்கலாம்.மோதல் நிலை வர்த்தக சம்மேளனத்துக்கும் BBS இற்கும் இடையிலானதாக, BBS இற்கும் அரசுக்குமிடையிலானதாக,அரசுக்கும் வர்த்தகர்களுக்குமிடையிலானதாக...என பல கோணங்களில் நகர இடமிருந்தது.இது இஸ்லாம் எமக்கு காட்டும் பிரச்சினையை நகர்த்தும் பொறிமுறை.இதனை சிலரை சிலருடன் மோதவிடுவதனூடாக உலகில் நலவை காப்பதாக வரும் வசனத்தை வைத்து ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி அவரது நூலொன்றில் விளக்குகிறார்.ஆனால்,அந்த அரசியல் முதிர்வை இன்னும் அடையவில்லை.அதனை கவனமாக அரசு இந்த விவகாரத்தில் கையாண்டது என்பதனையும் நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
    அதுவெல்லாம் போக நாம் ஒரு வித்தியாசமான பொறிக்குள் இப்போது இருக்கின்றோம்.அதனை எப்படி சாதகமாக்கலாம் என்பதனை சற்று நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.நமது இந்த நகர்வு ஹுதைபியாவுக்க ஒப்பிடப் படுகிறதெனின் எம்மிடம் நாம் இருக்கும் நிலையிலிருந்து பத்து மடங்கு முன் நகரும் பொறிமுறையொன்று ,திட்டமிடலொன்று நிச்சயம் அவசியப்படுகிறது.அப்படித்தான் ஹுதைபியா காணப்பட்டது.அது வெறும் விட்டுக் கொடுப்பும் தாழ்ந்து போதலுமல்ல மாற்றமாக வார்த்தைகளை விட்டுக் கொடுத்து இலக்கை நோக்கிய நகர்விற்கான தூர நோக்குடன் செய்யப்பட்ட உடன்பாடு.இதனை ஸுரா பத்ஹ் மிக அழகாக விளக்குகிறது.அது முஸ்லிம் சமூகத்தை அரசியல் முதிர்ச்சி நிலையை நோக்கி நகர்த்திய உடன்படிக்கை.அடுத்து ஹுதைபியா வெற்றியென்பது நபியவர்களின் உருவாக்கத்திற்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்(அவர்கள் மரத்தின் கீழ் உடன்படிக்கை செய்த போது அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான்).அங்கு வெற்றிக்குறிய பண்புகள் கொண்ட மனிதர்களை அரசியல் போராட்ட நிலையை நோக்கி நகர்த்தியமைதான் ஹுதைபியாவின் வெற்றி.எனவே அதன் பின் இஸ்லாத்தில் இணைந்தோர் பத்து மடங்காய் அதிகரித்தனர்.சூழ்ச்சியில் ஈடுபட்ட யுத சக்தி அறபுத் தீபகற்பத்திலிருந்து இறுதியாய் துடைத்தெறியப்பட்டது.சர்வதேச அளவில் ஆட்சியாளர்களுக்கு தூது கொண்டு செல்லப்பட்டது...இறுதியாய் மக்கா இரத்தம் சிந்தா படையெடுப்பால் வெற்றி கொள்ளப்பட்டது...
  நாம் நமது விட்டுக் கொடுப்பை ஹுதைபியாவுக்கு ஒப்பிடையில் இந்த பிண்ணனிகளையெல்லாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.எம்மிடம் ஒரு வழக்கமிருக்கிறது,நமது நிலைப்பாடுகளை ஆதரிக்க வெளிப்படையில் ஒன்றிப்போகும் விடயங்களை நாம் இலேசாக தூக்கிச் சொல்லி விடுவோம்.ஆனால் அந்த விடயத்துக்கும் எமது நிலைப்பாடுகளுக்குமிடையே பாரிய வேறுபாடு காணப்படும்.
   நபியவர்களது தஃவா வெறும் அற்புதங்களாலும் நப்பாசைகளாலும் நிறைந்ததல்ல.மாற்றமாக அதில் மனித முயற்சிக்குறிய தேவை அடிப்படையில் காணப்பட்டது.இதுதான் இஸ்லாத்தின் இயல்பு .நாம் உழைக்காது விட்டால் இஸ்லாம் வெற்றி பெற மாட்டாது.அந்த வகையில் எமது அடுத்த நகர்வை பிரார்த்தனைகளுடன் மாத்திரம் நிறுத்திவிடாது திட்டமிட்டு செயற்பட வேண்டும்.சத்தியத்திற்குத்தான் உலகில் இடம் அசத்தியத்திற்கில்லை என்பதை ஆழ மனதில் பதித்துக் கொண்டு அடுத்த எட்டை சிந்தியுங்கள்.
   அடுத்து நாம் என்ன செய்யலாம்?
      1-இதனை நமது உற்பத்திகளை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பாய் பயன் படுத்தலாம்.
  2-நமது உற்பத்திகளை நுகரலாம்
 3-நமது நுகர்வு மோகத்தை குறைத்து எமது பொருளாதாரத்தை தன்நிறைவுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கு குடும்ப ரீதியாக ,பிரதேச ரீதியாக ,நிறுவன ரீதியாக சிந்திக்கலாம்.(குடும்பத்துக்கு தேவையான பிஸ்கட்டை வீட்டில் தயாரித்தல்...பிஸ்கட்டை நமது உள்ளுர் பேகரி தயாரிப்பாளரை வைத்து தயாரித்தல்...பழச்சாறு....)...இதன் அடுத்த விளைவு பல்தேசிய கம்பனிகள் பிற தயாரிப்புகளில் இருந்து நாம் விடுதலை பெறுதலும் ...அவர்கள் மீண்டும் ஹலால் தேடி எம்மை நாடி வருதலும்..
4-வியாபாரிகள் நமது மற்றும் நம்பகமான பொருட்களை மாத்திரம் கடைகளுக்கு விற்பனைக்காக வாங்குதல்...
5-ஹலாலை இஸ்லாத்தை விளக்குவதற்கான ஒரு ஊடகமாக பயன்படுத்தல்..
         இப்படி நாம் சரியாக திட்டமிட்டு ஒரு மாதம் செய்தாலே நிலமை தலை கீழாய் மாறும் வாய்ப்புக்கள் வரலாம்....இங்கு நாம் அரசியல் ஆடு களங்களை நன்கு விளங்கி காய் நகர்த்த வேண்டும்...
         மீண்டும் சந்திப்போம்...இவை பற்றிய உங்களது கருத்துக்களையும் பகிரும் போது நல்லதோர் கருத்தை வடிவமைக்கலாம்...அல்லாஹ்வே போதுமானவன்.
 

” ஹலால் தெளிவாயுள்ளது,ஹராமும் தெளிவாயுள்ளது.அவற்றிற்கிடையே தெளிவற்ற சில விடயங்களும் காணப்படுகின்றன.அவற்றை அதிகமான மனிதர்கள் அறியமாட்டார்கள்....” 
"யார் ஜாஹிலிய்யத்தை விளங்காமல் இஸ்லாத்தில் மாத்திரம் வளர்ந்தாரோ அவர் இஸ்லாத்தை துண்டு துண்டாக உடைப்பார் என்ற உமர் (றழி) கூற்றை இங்கு நினைவு படுத்தாமல் இருக்க முடியாது."

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...