அதிகாலை ஸஹர் நேரம் முதல் தொலைபேசி அழைப்பு:சேர் ஊர்ல ஒரே குழப்பமாய் உள்ளது நோன்பு பிடிக்க முடியுமா? இது கிழக்குக்கு வெளியில் இருந்து வந்த ஓர் அழைப்பு...ஆம் கட்டாயம் பிடிக்கத்தானே வேண்டும் இதில் தலைமையின் முடிவுதான் முடிவு...அந்த நேரம் முதல் நோன்பை விடவா என கேட்டு வந்த எனது மாணவியர் முதல் சகோதரர்கள் அனைவரதும் அழைப்புகளுக்கெல்லாம் எனது பதில் அதுவாகத்தான் இருந்தது...எனக்கு பக்கத்தில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட வண்ணம் சுபஹுக்கு பின்னர் வந்தார்...அவர் வரும் போதே விடயம் என்னவென்று தெரியும்...நான் மிகவும் நிதானமாக வெளியே சென்றேன்...அவர் என்ன நிலைப்பாடு என்றார்...தலைமையின் முடிவுதான் முடிவு என்றேன்...கிண்ணியாவில் கொண்டாடுகிறார்களாமே....அது அவரகளது முடிவு...நாம் தலைமையை பின்பற்றுவதுதான் ஷரீஆ என்றேன்...அவர் கோபவயப்பட்டவராக...நீங்க என்ன பொது மகனுக்கு சொல்வதை சொல்கிறீர்கள்...என்றார்...இல்லை,இந்த விடயத்தில் ஷரீஆ அணுகுமுறையைத்தான் சொல்கிறேன் என்றேன்...பிறகு நீண்ட உரையாடலில்...ஜம்இய்யா இதனை சமூகத்துக்கு விளக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் அவர் விடை பெற்றார்.
ழுஹர் தொழுகை முடிந்து பள்ளிக்கு வெளியே உரையாடல்....சிலர் இன்று நோன்பு பிடிப்பது ஹராம் என்றனர்...நான் கேட்டேன்...நீங்கள் அதனை எப்படி தீர்மானிப்பீர்கள்?...காலையில் வந்த நண்பர் சொன்னார்...நோன்பை விட்டவர்களை பிழை சொல்ல முடியாதென...இல்லை அவர்கள் விட்டால் பிழை...இது தலைமை எடுக்கும் முடிவுதான்...வேண்டுமென்றால் தலைமை இப்போது எமது முடிவு பிழை நீங்கள் நோன்பை விடுங்கள் என்றால் விடலாம்...இல்லாத போது முடியாது என்றேன்...
இங்கு நான் சொல்ல வந்த விடயம் நாம் பொதுமகனாய் எப்படி விடயத்தை பார்க்க வேண்டும் என்பதனைத்தான்...இப்படியான விவகாரங்களில் தலைமையின் முடிவினையே நாம் பின்பற்ற வேண்டும்.இத்தகைய விவகாரங்களில் தலைமைதான் முடிவெடுக்கும் தனிமனிதர்களல்ல...தனிமனிதர்கள் முடிவெடுத்தால்...வீட்டுக்கு வீடு பெருநாளும் நோன்பும் வித்தியாசப்படும்...தலைமை இதில் தவறு இழைக்கழாமா என்றால் நிச்சயம் சாத்தியம் உண்டு...ஆனால் அதற்காய் தலைமையை தூக்கி எறிந்துவிட முடியாது...நஸீஹத் செய்யலாம்..கட்டுப்படுவதுடன் இணைந்து அது நடக்க வேண்டும்...இந்த விவகாரம் -மஃஸியா-என்ற வட்டத்தில் வருவதல்ல...இது இஜ்திஹாதில் வரும் தவறு...இதில் கட்டுப்படுவதில் தவறு கிடையாது...மாற்றமாக கட்டுப்படாதிருப்பதே பாவம்...
நாம் இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விடயம் நாம் உம்மதுத்தஃவா -தஃவா சமூகம்...நாம் வெறும் உம்மதுர்ரஹபனா-கிரியைகள் புரியும் துறவுச்சமூகமல்ல...நாம் இஸ்லாத்தை கிரியை கண்ணோட்டத்தல் மாத்திரம் பார்ப்பதே நிறைய நாம் குழம்பிப் போவதற்குக் காரணம்...என்னிடத்தில இவ்விவகாரத்தில் தெளிவு கேட்டவர்களுள்...ஆன்மீகம் மிகைத்த ஒருவர் நோன்பை விட்டதாகச் சொன்னார்...நிச்சயமாய் அவர் விடுவார் ஏனெனில் அவரில் இஸ்லாத்தை அப்படிப்பார்க்கும் போக்கே மிகைத்துள்ளது...தலைமை-கட்டுப்பாடு -ஷுறா -இஜ்மா-நஸீஹத்...இவை எல்லாம் இஸ்லாத்தை சமூகமாய்,தஃவாவாய் பார்க்காதவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை...
இங்கு தலைமைக்கு கட்டுப்படுவதுதான் இபாதத் என்பதை பலருக்கு விளங்குவது கடினம்...அதற்கு மாறு செய்வதுதான் பாவம் என்பதை விளங்குவது கடினம்...எனவே இஸ்லாம் பற்றிய எமது பார்வை மாறவேண்டியுள்ளது...இந்தப் பெருநாள் வெறும் தொழுகையல்ல தூது-குர்ஆன் கிடைத்தமையை கொண்டாடுதல்...தூதுக்காய் உழைப்பவன் சற்று களைப்பாறுதல்....இந்த உண்மையை சமூகம் விளங்குமா?!
..................................................................................
அடுத்து இந்த விவகாரத்தை தலைமை எப்படி கையாண்டிருக்கலாம்?
இந்த விடயத்தை ஒரு பிரதேச சமூகமும் அதன் தலைமைகளுமே உருதிப்படுத்தும் வேலையில் எமது நிபந்தனைகளில் இருந்து வெளியில் சென்று அதனை நீண்ட கலந்துரையாடலுக்கு உற்படுத்தி அழகான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும் என்பது இந்த விவகாரத்தின் இரு பகுதியையும் பாரக்கும் போது கிடைக்கின்ற பதில்...யாரும் தவறு விடலாம் என்ற வகையில் இந்த இடத்தில் நாம் தவறிவிட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது...
...அடுத்து இந்த விவகாரத்தை நேற்று இரவே விளக்கியிருக்கலாம் எனினும் பிந்தியாவது நீண்ட தாமதமின்றி விளக்கியது சிறந்தது
....ஆனால்,அது தலைமையொன்றின் நிதானமான விளக்கமாக அமையாமை கவலையை தந்தது.
....தலைமை எப்போதும் நிதானமாய் விவகாரங்களை அணுக வேண்டும்...இந்த உறையை கேட்ட போது எனக்கு பல வருடங்களாக பழக்கப்பட்ட ஒருவரின் தொணி நினைவில் வருவதை தவிர்க்க முடியாமல் இருந்தது...இதனை எனது நண்பர் ஒருவரும் பதிவொன்றில் குறித்திருந்தார்...அந்தத் தொணி 200,300 மாணவர்களுக்கு சரிவரலாம்..அதுவும் இன்று வழக்கொழிந்து விட்டது...ஆனால் ஒரு சமூகத்தை வழிநடாத்த பயன் தரமாட்டாது...
....ஜம்இய்யாவுக்கு தனது கிளைகளுடன் எவ்வளவு சரியான தொடர்புள்ளது என்ற கேள்வி இங்கு எழுவதை தவிர்க்க முடியவில்லை...ஒரு கிளையின் தலைவர் அதுவும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசக்கிளையின் தலைவர் யாரென் தேசியத் தலைவருக்கு தெரியாதிருப்பது வருந்தத்தக்கது...
....நான் என்ற தோறனையில் பேச்சு அமைந்தமை காட்டமாக இருந்தது...குர்ஆன் கூட அப்படிப் பேசுவதில்லை..நாம் குர்ஆனிய மாதத்தின் இருதியில் இருக்கிறோம் ...அதன் அணுகுமுறை எம்மில் சிறு சாயலையாவது காட்டியிருக்க வேண்டும்...
...யாரும் என்னை விமர்சித்தது கிடையாது...என்ற தோரனையில் பேச்சு இருந்தது...யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்லர்...இதில் நாம் முன்மாதிரியாய் அவற்றை ஏற்கத் தெரிய வேண்டும்..
....அடுத்து விளக்கம் தேவைப்பட்ட விடயம் பேசப்படவில்லை...இது எமது உலமாக்களது முன்வைப்பு முறையிலுள்ள பெரும் குறைபாடு....இதன் விளைவுகளை கடந்த காலங்களில் நன்றாகவே அணுபவித்தோம்...
....கிண்ணியாவில் என்ன நடந்தது?அது பற்றிய நிலைப்பாடு என்ன? நாம் இதனை எப்படி அணுக வேண்டும்?இதில் எம்மிலும் பிழை நேர்ந்திருக்க வாய்ப்புள்ளது...என்று அழகாக விடயத்தை விளக்கியிருக்கலாம்...ஆனால,அவர் பேசிய சில வாரத்தைகள் கண்டிக்கத்தக்கது..சுனாமியில் நாங்க தேவை இதற்கு தேவையில்லையா என்ற தொணி மனதுகளை புண்படுத்துவதாய் இருந்தது...அங்குள்ள சகோதரர்களும் வேண்டாம் பிள்ளைத்தனமாக இவ்விவகாரத்தை அணுகவில்லை...அவர்களது அணுகுமுறையிலும் நியாயமுள்ளது...எனவே எல்லோருக்குமான தலைமை விடயங்களை கவனமாய் அணுக வேண்டும்
.....இது எனது நஸீஹத்கள்...சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு செல்ல வேண்டிய இத் தருணத்தில் கவனமாய் நடக்க வேண்டியுள்ளது...இது சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தை வேறருக்கும் சூழ்ச்சிகளின் உச்ச தருணம் ...எனவே நாம் இணைவுகளை நோக்கி சமூகத்தை கவனமாய் வழி நடாத்த வேண்டும்
ழுஹர் தொழுகை முடிந்து பள்ளிக்கு வெளியே உரையாடல்....சிலர் இன்று நோன்பு பிடிப்பது ஹராம் என்றனர்...நான் கேட்டேன்...நீங்கள் அதனை எப்படி தீர்மானிப்பீர்கள்?...காலையில் வந்த நண்பர் சொன்னார்...நோன்பை விட்டவர்களை பிழை சொல்ல முடியாதென...இல்லை அவர்கள் விட்டால் பிழை...இது தலைமை எடுக்கும் முடிவுதான்...வேண்டுமென்றால் தலைமை இப்போது எமது முடிவு பிழை நீங்கள் நோன்பை விடுங்கள் என்றால் விடலாம்...இல்லாத போது முடியாது என்றேன்...
இங்கு நான் சொல்ல வந்த விடயம் நாம் பொதுமகனாய் எப்படி விடயத்தை பார்க்க வேண்டும் என்பதனைத்தான்...இப்படியான விவகாரங்களில் தலைமையின் முடிவினையே நாம் பின்பற்ற வேண்டும்.இத்தகைய விவகாரங்களில் தலைமைதான் முடிவெடுக்கும் தனிமனிதர்களல்ல...தனிமனிதர்கள் முடிவெடுத்தால்...வீட்டுக்கு வீடு பெருநாளும் நோன்பும் வித்தியாசப்படும்...தலைமை இதில் தவறு இழைக்கழாமா என்றால் நிச்சயம் சாத்தியம் உண்டு...ஆனால் அதற்காய் தலைமையை தூக்கி எறிந்துவிட முடியாது...நஸீஹத் செய்யலாம்..கட்டுப்படுவதுடன் இணைந்து அது நடக்க வேண்டும்...இந்த விவகாரம் -மஃஸியா-என்ற வட்டத்தில் வருவதல்ல...இது இஜ்திஹாதில் வரும் தவறு...இதில் கட்டுப்படுவதில் தவறு கிடையாது...மாற்றமாக கட்டுப்படாதிருப்பதே பாவம்...
நாம் இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விடயம் நாம் உம்மதுத்தஃவா -தஃவா சமூகம்...நாம் வெறும் உம்மதுர்ரஹபனா-கிரியைகள் புரியும் துறவுச்சமூகமல்ல...நாம் இஸ்லாத்தை கிரியை கண்ணோட்டத்தல் மாத்திரம் பார்ப்பதே நிறைய நாம் குழம்பிப் போவதற்குக் காரணம்...என்னிடத்தில இவ்விவகாரத்தில் தெளிவு கேட்டவர்களுள்...ஆன்மீகம் மிகைத்த ஒருவர் நோன்பை விட்டதாகச் சொன்னார்...நிச்சயமாய் அவர் விடுவார் ஏனெனில் அவரில் இஸ்லாத்தை அப்படிப்பார்க்கும் போக்கே மிகைத்துள்ளது...தலைமை-கட்டுப்பாடு -ஷுறா -இஜ்மா-நஸீஹத்...இவை எல்லாம் இஸ்லாத்தை சமூகமாய்,தஃவாவாய் பார்க்காதவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதவை...
இங்கு தலைமைக்கு கட்டுப்படுவதுதான் இபாதத் என்பதை பலருக்கு விளங்குவது கடினம்...அதற்கு மாறு செய்வதுதான் பாவம் என்பதை விளங்குவது கடினம்...எனவே இஸ்லாம் பற்றிய எமது பார்வை மாறவேண்டியுள்ளது...இந்தப் பெருநாள் வெறும் தொழுகையல்ல தூது-குர்ஆன் கிடைத்தமையை கொண்டாடுதல்...தூதுக்காய் உழைப்பவன் சற்று களைப்பாறுதல்....இந்த உண்மையை சமூகம் விளங்குமா?!
..................................................................................
அடுத்து இந்த விவகாரத்தை தலைமை எப்படி கையாண்டிருக்கலாம்?
இந்த விடயத்தை ஒரு பிரதேச சமூகமும் அதன் தலைமைகளுமே உருதிப்படுத்தும் வேலையில் எமது நிபந்தனைகளில் இருந்து வெளியில் சென்று அதனை நீண்ட கலந்துரையாடலுக்கு உற்படுத்தி அழகான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும் என்பது இந்த விவகாரத்தின் இரு பகுதியையும் பாரக்கும் போது கிடைக்கின்ற பதில்...யாரும் தவறு விடலாம் என்ற வகையில் இந்த இடத்தில் நாம் தவறிவிட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது...
...அடுத்து இந்த விவகாரத்தை நேற்று இரவே விளக்கியிருக்கலாம் எனினும் பிந்தியாவது நீண்ட தாமதமின்றி விளக்கியது சிறந்தது
....ஆனால்,அது தலைமையொன்றின் நிதானமான விளக்கமாக அமையாமை கவலையை தந்தது.
....தலைமை எப்போதும் நிதானமாய் விவகாரங்களை அணுக வேண்டும்...இந்த உறையை கேட்ட போது எனக்கு பல வருடங்களாக பழக்கப்பட்ட ஒருவரின் தொணி நினைவில் வருவதை தவிர்க்க முடியாமல் இருந்தது...இதனை எனது நண்பர் ஒருவரும் பதிவொன்றில் குறித்திருந்தார்...அந்தத் தொணி 200,300 மாணவர்களுக்கு சரிவரலாம்..அதுவும் இன்று வழக்கொழிந்து விட்டது...ஆனால் ஒரு சமூகத்தை வழிநடாத்த பயன் தரமாட்டாது...
....ஜம்இய்யாவுக்கு தனது கிளைகளுடன் எவ்வளவு சரியான தொடர்புள்ளது என்ற கேள்வி இங்கு எழுவதை தவிர்க்க முடியவில்லை...ஒரு கிளையின் தலைவர் அதுவும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசக்கிளையின் தலைவர் யாரென் தேசியத் தலைவருக்கு தெரியாதிருப்பது வருந்தத்தக்கது...
....நான் என்ற தோறனையில் பேச்சு அமைந்தமை காட்டமாக இருந்தது...குர்ஆன் கூட அப்படிப் பேசுவதில்லை..நாம் குர்ஆனிய மாதத்தின் இருதியில் இருக்கிறோம் ...அதன் அணுகுமுறை எம்மில் சிறு சாயலையாவது காட்டியிருக்க வேண்டும்...
...யாரும் என்னை விமர்சித்தது கிடையாது...என்ற தோரனையில் பேச்சு இருந்தது...யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்லர்...இதில் நாம் முன்மாதிரியாய் அவற்றை ஏற்கத் தெரிய வேண்டும்..
....அடுத்து விளக்கம் தேவைப்பட்ட விடயம் பேசப்படவில்லை...இது எமது உலமாக்களது முன்வைப்பு முறையிலுள்ள பெரும் குறைபாடு....இதன் விளைவுகளை கடந்த காலங்களில் நன்றாகவே அணுபவித்தோம்...
....கிண்ணியாவில் என்ன நடந்தது?அது பற்றிய நிலைப்பாடு என்ன? நாம் இதனை எப்படி அணுக வேண்டும்?இதில் எம்மிலும் பிழை நேர்ந்திருக்க வாய்ப்புள்ளது...என்று அழகாக விடயத்தை விளக்கியிருக்கலாம்...ஆனால,அவர் பேசிய சில வாரத்தைகள் கண்டிக்கத்தக்கது..சுனாமியில் நாங்க தேவை இதற்கு தேவையில்லையா என்ற தொணி மனதுகளை புண்படுத்துவதாய் இருந்தது...அங்குள்ள சகோதரர்களும் வேண்டாம் பிள்ளைத்தனமாக இவ்விவகாரத்தை அணுகவில்லை...அவர்களது அணுகுமுறையிலும் நியாயமுள்ளது...எனவே எல்லோருக்குமான தலைமை விடயங்களை கவனமாய் அணுக வேண்டும்
.....இது எனது நஸீஹத்கள்...சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு செல்ல வேண்டிய இத் தருணத்தில் கவனமாய் நடக்க வேண்டியுள்ளது...இது சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தை வேறருக்கும் சூழ்ச்சிகளின் உச்ச தருணம் ...எனவே நாம் இணைவுகளை நோக்கி சமூகத்தை கவனமாய் வழி நடாத்த வேண்டும்