Wednesday, June 30, 2010

மௌலானா மௌதூதியின் பார்வையில் தப்லீக் ஜமாஅத்

கலாநிதி நூர் முஹம்மத் ஜுமுஆ
தமிழில்: எம்.என். இக்ராம்
இஸ்லாமிய எழுச்சியின் ஆரம்பத்தை நாம் நோக்கும்போது அது அறபு இஸ்லா மிய உலகு, இந்தியா, துருக்கி போன்ற பல்வேறு இடங்களிலுமிருந்து தோற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.
இந்த எழுச்சியைத் தோற்றுவித்த அதன் ஆரம்பப் பரம்பரையினரை நாம் பார்க்கின்றபோது பல்வேறு ஜமாஅத்துக்களையும் தோற்று வித்த அவர்களிடம் ஒரே வகையான பண்புகள் இருந்திருப்பதைக் காண்கிறோம். அன்பு, சகோதரத்துவம், தூய்மை, உண்மை, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பிரார்த் தித்துக் கொள்ளுதல் போன்ற உயர்ந்த பண்புகள் அவர்களிடம் காணப் பட்டிருக் கின்றன.
இதற்கான ஓர் உதாரணத்தை இமாம் மௌதூதியிடம் நாம் காண்கிறோம். அன்று பாகிஸ்தானி லும் இந்தியாவிலும் இயங்கிவந்த ஜமாஅத்தே இஸ்லாமியின் உத்தி யோகபூர்வப் பத்திரிகையாக இருந்த தர்ஜுமானுல் குர்ஆன்சஞ்சிகையில் தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகரின் பாசறையில் சில நாட்கள்என்ற தலைப்பில் இமாம் மௌதூதி அவர்கள் ஒரு கட்டுரையை எழுதி வந்தார். அதில் சில பகுதிகளை நாம் அவரது வார்த்தையிலேயே இங்கு நோக்கலாம்.
இந்தியாவின் தலைநகரான டில்லிக்கு அருகாமையில் உள்ள மேவாத் எனும் பிரதேசத்தைத் தரிசிக்கும் வாய்ப்பொன்று எனக்குக் கிடைத்தது. இதற்கு முன்னர் நான் இந்தப் பிரதேசத்தில் முஹம்மத் இல்யாஸ் கான் திஹ்லவியின் தலைமை யில் இஸ்லாமிய எழுச்சி யொன்று பரவிக்கொண்டிருக்கும் செய்தியைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அந்த எழுச்சி அந்தப் பிரதேசத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருப்பதாகவும் அறிந்தேன். எனவே, இந்த சலனமற்ற மௌன சீர்திருத்தப் புரட்சியின் விளைவுகளைக் காண்பதற்கு நான் பெரும் தாகத்துடன் இருந்தேன்.
புவியியல் ரீதியாக மேவாத்; டில்லி, அல்வர், ஜோர்ஜ்ஜானா, போன்ற பல பிரதேசங் களை எல்லை களாகக் கொண்ட பெரும் பரப்புள்ள ஒரு பிரதேசம். எனது அறிவின்படி அஷ்ஷெய்க் நிழாமுத்தீன் மஹ்பூப் இலாஹியுடையதும் அவரது சகாக் களதும் முயற்சியினால்தான் இங்கு இஸ்லாம் பரவியிருக்கின்றது. எனி னும் வினசத்திற்குரிய விடயம்; இந்த அத்தனை முயற்சிகளும் இஸ்லாமிய அரசுகளின் பொடுபோக்குத் தனத்தால் வீணாகிப் போய் விட்டன.
இந்தப் பிரதேச மக்கள் தலை நகருக்கு மிக அருகாமையில் இருந்தபோதும் அறியாமையின் பிடிக்குள்ளும் கோத்திர வழக்காறுகளின் இருளுக்குள்ளும் நீண்ட பல வருடங்களாக மூழ்கிப் போயினர். காலப் போக்கில் இந்தப் பிரதேசத்தில் இஸ் லாத்தின் அடையாளங்கள் படிப்படியாக மங்கிப் போயின. இறுதியில் அதன் எந்த எச்சசொச்சங்களும் இல்லாமல் அழிந்துபோயின. அங்குள்ளவர்களுக்கும் தாம் முஸ்லிம்கள் என்பதைத் தவிர வேறெதுவுமே தெரியாத நிலை உருவாகியிருந் தது.
இஸ்லாத்தின் தோற்றங்களோ அடையாளங்களோ அங்கு காணப் படவில்லை. ஷஹாதத் கலிமாவை மொழியத் தெரிந்த ஒரு கிராமவாசி கூட இருக்கவில்லை. இந்நிலையில் தொழுகை பற்றியும் ஏனைய இஸ்லாமிய கடமைகள் பற்றியும் அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்களா என்பது பற்றி நாம் பேச வேண்டியதே கிடையாது.
அவர்களிடம் ஜாஹிலிய்ய அறியாமையின் அனைத்து அடையாளங்களும் காணப் பட்டன. ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்திலிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே எந்த வெட்க உணர்வுமின்றி கலந்து பழகினார்கள். களவு, வழிப்பறிக் கொள்ளை, பொய், ஏமாற்று, வஞ்ச கம், விபச்சாரம் என சீர்கேட்டுக் கும் பின்னடைவுக்குமான என்னென்ன அடையாளங்கள் தேவையோ அவை அத்த னையையும் அங்கே காண முடியுமாக இருந்தது.
இத்தகைய காரிருள் நிறைந்த ஜாஹிலிய்யத் அலை மோதுகின்ற ஒரு சூழலில் தான் அஷ்ஷெய்க் இல்யாஸ் அவர்கள் அந்தப் பிர தேசத்தில் தனது முயற்சியை மேற் கொண்டார்கள். தனது கடும் பிரயத்தனத்தினால் அங்கே ஒன்றன்பின் ஒன் றாக இஸ்லாத்தின் மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்தார்கள். முதலில் அவர் அல்லாஹ்வை நோக்கி மனிதர்களை அழைக்க ஆரம்பித்தார்கள். ஜாஹிலிய்யத் தின் அனைத்து வடிவங்களையும் கொண்டிருந்த இப்பிரதேச மக்களிடையே ஒரு சிறு காலப்பகுதிக்குள்ளால் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட அவர்களால் முடியுமாக இருந்தது.
இப்போது அங்குள்ள சிறுவர்களுக்கு ஒழுக்கத்தையும் அடிப்படைப் பண்பாடுகளை யும் சுத்தத்தையும் மார்க்கத்தையும் என வாழ்வின் அரிச்சுவடிகளைக் கற்றுக் கொடுப்பதற்காக 250 பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்தப் பாடசாலைகளில் கற்று வெளியேறுபவர்கள் டில்லிக்கு அருகிலுள்ள நிழாமுத்தீன் மஹ்மூத் இலா ஹியினுடைய கிராமத்தில் அமைந்துள்ள சன்மார்க்க பல்லைக்கழகத்தில் சேர்ந்து தமது கல்வியைத் தொடர வாய்ப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அறிவு போதிக்கப் படுவதோடு அதனுடன் இணைந்த வகையில் இஸ்லாமிய தர்பிய்யத்தும் கற்பித்தல் பயிற்சி யும் வழங்கப்படுகிறது. சமூகத்திற்கு தஃவாவை முன்வைப்பதற்கும், அங்கு சீர்தி ருத்தத்தை மேற்கொள்வதற்கும் தேவையான கலைகளும் அவர்களுக்குக் கொடுக் கப்படுகிறது. பின்னர் அவர்கள் தஃவாவுக்காகப் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகி றார்கள்.
ஷெய்க் இல்யாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அவர்கள் மேற்கொள்ளும் சீர்திருத்தப் பணியினதும் தர்பிய்யத்தினதும் உழைப் பினதும் விளைவுகளை நான் எனது கண்களால் பார்த்தேன். அந்தவகையில், இங்குள்ள சில கிராமங்களில் தொழுகைக்கும் செல்லாத ஒரு சிறு குழந்தையைக் கூட நாம் காண முடியாது. சிறிது காலத்திற்கு முன்னர் ஆடு, மாடுகள் தங்கும் கொட்டில்களாகக் காணப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்தும் இன்று ஐந்து வேளையும் அதான் கூறப்பட்டு தொழுகை நடத்தப்படக்கூடிய இடங்களாகக் காணப்படுகின்றன.
ஷெய்க் இல்யாஸ் அந்த நாட் டுப்புற மனிதர்களிடம் தஃவாவுக் கான ஆர்வத்தை உண்டுபண்ணியுள்ளார்கள். சீர்திருத்தத்திற்காக செயற்படும் வேட்கையை உயிர்ப் பித்துள்ளார்கள். ஜாஹிலிய்யத்தினதும் வழிகேட்டினதும் குறியீடுகளாகக் காணப் பட்ட மனிதர்களைப் பண்படுத்தி மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் தாஈக்களாக உயர்த்தியுள்ளார்கள்.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...