எம்.என்.இக்ராம்

முஸ்லிம் சமுகத்தில் சிந்தனை ரீதியாகவும் நடைமுறையிலும் மொத்தமாகவே பாதிப்புக்குட்பட்ட இரண்டு விஷயங்கள் காணப்படுகின்றன. அவை 1. இஸ்லாமியகுடும்ப வாழ்வு, 2. பொருளாதார முறை.
இவை இரண்டிலும் நடைமுறை எப்படிப்போனாலும் அவை பற்றிய அடிப்படையான இஸ்லாமிய கருத்துக்களே கூட முஸ்லிம்களால் அந்நியமாக பார்க்கப்படும் அளவு இன்று நிலமை மாறிப்போயுள்ளது. அந்த வகையில் இஸ்லாமிய பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு முயற்சிகள், தேடல்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், குடும்ப வாழ்வு சம்பந்தமான கவனம் இன்னும் நமது மரபு சார்ந்த சிந்தனையிலிருந்து வெளிவரவில்லை. மேலும் நமது குடும்பங்களில் இஸ்லாம் குடும்ப வாழ்வு சம்பந்தமாகக் கூறும் அடிப்படையான அம்சங்களைக்கூட காணமுடியாதளவு குடும்ப வாழ்வு சிதறி சின்னாபின்னமாகிப் போயுள்ளதை நாம் காணலாம்.
இஸ்லாமியக் குடும்ப வாழ்வை உருவாக்குவதற்கான முயற்சியை எங்கிருந்து துவங்குவது என்பது சிக்கலான ஒரு விஷயமாக மாறியுள்ளது. ஒரு நல்ல மனைவியை, கணவனை தேர்வு செய்தல் என்ற நிலையிலிருந்து ஆரம்பிப்போம் என்றால், அவர்களை சிதறிப்போன இன்றைய குடும்பங்களில் இருந்து தான் தேர்வு செய்தாக வேண்டும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அவர்கள் இந்த சிதறிய குடும்பங்களிலும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள இந்த சமூகத்திலும் குறைந்த பட்சமான பாதிப்பிலிருந்தாவது விலகியிருப்பார்கள் என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.
இங்கு தான் இஸ்லாமிய சீர்திருத்த செயல்பாடுகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேன்டிய தேவை எழுகிறது. இஸ்லாமியக் குடும்ப உருவாக்கம் என்ற செயல்பாடு இஸ்லாமிய சீர்திருத்த செயல்பாடுகளுடன் இணைந்த வகையிலேயே இடம் பெறுதல் வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தின் சீரான இயக்கத்தில் பங்களிப்பு செய்யும் வகையிலான குடும்பங்கள் தோற்றம் பெறும். இஸ்லாமிய சீர்திருத்தப் பணியின் மூலம் உருவாக்கப்படும் ஆணும் பெண்ணும் தான் அந்தக் குடும்பத்தின் அடிப்படையாக இருப்பர். இவ்வகையில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இது தொடர்பாகமுன்வைத்த சிந்தனைகளில் இருந்து நாம் இப்பத்தியை ஆரம்பிக்க விரும்புகிறோம். அது நமது குடும்பங்களை சீர் படுத்திக் கொள்வதில் நமக்குத் தெளிவானவழிமுறையைக் காட்டித்தரலாம்.
நாம் என்ன விரும்புகிறோம்? நாம் முதலில் விரும்புவது; ஆன்மாக்களின் விழிப்பை, உள்ளங்களின் உயிர்ப்பை, உணர்விலும் சிந்தனையிலும் ஏற்படும் உண்மையான எழுச்சியை. நாம் பலம் மிக்க, இளைய உள்ளங்களை விரும்புகிறோம். புத்துணர்வு பெற்ற, செயலூக்கம்கொண்ட உள்ளங்களை விரும்புகிறோம். கொழுந்து விட்டெரியும் ரோசமுள்ளஉணர்வுகளை விரும்புகிறோம். உயர்ந்த இலட்சியத்தையும் இலக்கையும் வரையறை செய்து அதை நோக்கி செயற்பட்டு அதனை அடைந்து கொள்கின்ற வகையில்அமைந்த சிறந்த கனவுகளை, ஆசைகளை விரும்புகிறோம்.
இந்த இலக்குகளும் இலட்சியங்களும் வரையறை செய்யப்பட வேண்டும். இந்தஉணர்வுகளும் சிந்தனைகளும் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.இவைஒரு கொள்கையாக,நம்பிக்கையாக மாறும் வகையில் ஒன்றுகுவிக்கப்படவேண்டும். அதன் பின்னர் அங்கு வாதாட்டங்களோ,சந்தேகங்களோ தோன்றக்கூடாது. இந்த வரையறைகள் இன்றி இது போன்ற எழுச்சி ஒரு பெரும் வெட்டவெளியில் பாய்ச்சப்பட்ட சிதறிய ஒழிக்கீற்றுக்கள் போன்றிருக்கும். அதில்வெளிச்சம் இருக்காது, வெப்பம் இருக்காது.
இந்த விழிப்புணர்வு அல்லது எழுச்சி தனது செயற்பாட்டை தனிமனிதனில் மேற்கொள்ளும். அப்போது அவன் இஸ்லாம் தனி மனிதனில்விரும்புகின்ற பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்த தனிமனிதனாக இருப்பான்.இஸ்லாம் தனிமனிதனில் அழகையும் அசிங்கத்தையும் பிரித்து உணர்கின்றஉணர்வை ஏற்படுத்த விரும்புகின்றது. சரியானதையும் தவறானதையும்பிரித்தறியும் திறனை ஏற்படுத்த விரும்புகிறது. சத்தியத்தின் முன்னால்பலவீனப்பட்டு நலிந்து போகாத உறுதியான செயற்திறன் மிக்க ஆழுமையைஏற்படுத்த விரும்புகிறது.
இந்த தனிமனித சீர்திருத்தத்தின் பாதிப்பு அவரது குடும்பத்தில் ஏற்படும்.குடும்பம் என்பது தனிமனிதர்களின் சேர்க்கையால் ஆன ஒரு நிறுவனம்.அக்குடும்பத்திலுள்ள குடும்பத்தலைவன் திருந்தி விட்டால் அங்குள்ள பெண்ணும்திருந்திவிடுவாள். அவர்கள் இருவரும் தான் குடும்பத்தின் தூண்கள்.அவர்களிருவராலும் இஸ்லாம் இட்டுள்ள அடிப்படைகளின் மீதமைந்த ஒரு வீட்டைஉருவாக்க முடியும்.
இஸ்லாம் குடும்பத்திற்கான அடிப்படைகளை சீராகமுன்வைத்துள்ளது.திருமணத்தின் போது சிறந்த துணையை தெரிவு செய்ய வழிகாட்டியுள்ளது. கணவன் மனைவியருக்கிடையிலான பிணைப்பைஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ளது.இருவருக்குமிடையிலான கடமைகளையும் உரிமைகளையும் வரையறைசெய்துள்ளது. இஸ்லாம் இரு தரப்பினருக்கும் இந்தத் திருமண இணைப்பின்விளைவாக வரும் பிள்ளையை அப்பிள்ளை முதிர்ச்சியடையும் வரைபொடுபோக்காக இல்லாமல் கண்காணிப்பது கடமை என்று கூறுகிறது. இந்ததிருமண வாழ்வின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு மிக நுணுக்கமானதீர்வுகளை முன்வைத்துள்ளது. இது பற்றிய எல்லா விடயங்களிலும் தீவிரமோகவனயீனமோ இல்லாது நடுநிலையான ஒரு வழிமுறையை கையாண்டுள்ளது.
எனவே, குடும்பம் சீரடைந்து விட்டால் சமூகம் சீரடைந்து விடும். சமூகம்என்பது இந்தக் குடும்பங்களின் சேர்க்கைதான். உண்மையில் குடும்பம் என்பது ஒருசிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரியகுடும்பம்.
நாம் இஸ்லாமிய தனிமனிதனை விரும்புகிறோம்ஞ் இஸ்லாமியவீட்டைவிரும்புகிறோம்ஞ் இஸ்லாமிய சமூகத்தை விரும்புகிறோம்ஞ் என்றாலும்அவையெல்லாவற்றுக்கும் முன்னால் இஸ்லாமிய சிந்தனை பரவ வேண்டும்என்று விரும்புகிறோம், அதன் மூலம் சமூகத்தின் எல்லா இடங்களிலும்இஸ்லாத்தின் பாதிப்பு ஏற்பட வேண்டும். சமூகத்தின் எல்லா விடயங்களும்இஸ்லாமிய சிந்தனையால் வழிநடாத்தப்படவேண்டும். அது இல்லாமல் நாம்ஒன்றையும் சாதிக்க முடியாது.
நாம் அனைவரும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் சுதந்திரமாக சிந்திக்கவேண்டும் என்று விரும்புகிறோம். எல்லா விடயங்களையும் மேற்கின்வரையறைகளுக்குள்ளால் நின்று, போக்குகளுக்குள்ளால் நின்று பாரம்பரியமாகசிந்திக்கும் நிலையிலிருந்து நாம் மாற வேண்டும்.
நாம் வரலாற்றில் சிறப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்த ஒரு சமூகத்தைபின்னணியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் தனித்துவமானபெறுமானங்களையும் ஆளுமைகளையும் கொண்டவர்களாக நாம் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோம்.
https://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/789-
No comments:
Post a Comment