ஆரம்பப்பாடசாலை,இடைநிலைப்பாடசாலை,உயர்தரப்பாடசாலை என பொதுவாக பாடசாலைகள் பிரிக்கப்படப்போவதாக கூறுகிறார்கள். இதன் போது தெற்கில் சிதறிய அமைப்பில் காணப்படும் முஸ்லிம் மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு போகவேண்டிய நிலை வந்தால் அதன் சாதக பாதகங்கள் யாது?..... இங்கு அரசின் இந்த திட்டத்தில் நிறைய நலன்கள் உள்ளன..நாம் முஸ்லிம்கள் என்ற வகையில்தான் கலாச்சார சிக்கல்கள் காணப்படுகின்றன.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகளின் போது கூட பல பயிற்றுவிப்பாளர்களால் எமது கலாசார விடயங்கள் கேலி செய்யப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.இந்த நிகழ்வுகள் முன்னெடுப்புக்களில் இருந்து அரசு தான் ஏலவே சொன்ன தேசிய கல்விக்கொள்கை ஒன்றை கட்டியெழுப்ப விரும்புகிறது என விளங்குகிறது. மேற்கின் திறந்த கலாசாரத்தினடியாக கட்டியெழுப்பப் பட்டுள்ள கல்வித்திட்டத்தைப் பார்க்கிலும் இது சிறந்ததுதான்.எனினும் சிறுபான்மையான நாம் இயன்றவரை நமது தனித்துவத்தை பேணவேண்டியுள்ளது.
எனவே நமது உரிமைப்போராட்டங்களை வெறும் பெயர்களுக்கும் வெளித் தோற்றங்களுக்குமான போராட்டமாக அல்லாமல் பண்புகள் ,பெறுமானங்கள்,சிந்தனைகளுக்கான போராட்டங்களாக மாற்றலாம்.இதில் நாம் இன அடையாளங்களுக்கு அப்பாலும் பலரை இணைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, இங்கு பாடசாலை மறுசீரமைப்பில் முஸ்லிம் பெயர்தாங்கிய ஆண் பெண் கலவன் பாடசாலைகளை தக்கவைக்க போராடுவதை விட்டு விட்டு இஸ்லாத்தின் பெறுமானத்தை வைத்து ஆண் பெண் வேறு வேறாக கற்கும் நிலையை உருவாக்கப் போராடலாம். பல்கழலைக்கழக பயிற்சிகளிலும் இதே விடயத்தையே முன் கொண்டு செல்வது சிறந்தது.
இப்படி நிறைய விடயங்களை சிந்திக்க வேண்டிய சூழலே முன்னால் வருகிறது.வேறுமனே பெயர்களுக்காகவும் வெளித் தோற்றங்களுக்காகவும் போராடி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு,போராடிப் பெற்ற பெயர்களை வைத்து எமது பெறுமானங்களை பேணிக் கொள்ள முடியாமல் சீரழிவதை விட பெறுமானங்களை வென்றெடுக்கும் நேர்மையான சக்தியாக முஸ்லிம்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோம் உண்மையில் முஸ்லிம் என்பவன் இனத்தால் அல்ல பண்பாலே அடையாளப் படுத்தப்பட வேண்டியவன்.
எனவே நமது உரிமைப்போராட்டங்களை வெறும் பெயர்களுக்கும் வெளித் தோற்றங்களுக்குமான போராட்டமாக அல்லாமல் பண்புகள் ,பெறுமானங்கள்,சிந்தனைகளுக்கான போராட்டங்களாக மாற்றலாம்.இதில் நாம் இன அடையாளங்களுக்கு அப்பாலும் பலரை இணைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, இங்கு பாடசாலை மறுசீரமைப்பில் முஸ்லிம் பெயர்தாங்கிய ஆண் பெண் கலவன் பாடசாலைகளை தக்கவைக்க போராடுவதை விட்டு விட்டு இஸ்லாத்தின் பெறுமானத்தை வைத்து ஆண் பெண் வேறு வேறாக கற்கும் நிலையை உருவாக்கப் போராடலாம். பல்கழலைக்கழக பயிற்சிகளிலும் இதே விடயத்தையே முன் கொண்டு செல்வது சிறந்தது.
இப்படி நிறைய விடயங்களை சிந்திக்க வேண்டிய சூழலே முன்னால் வருகிறது.வேறுமனே பெயர்களுக்காகவும் வெளித் தோற்றங்களுக்காகவும் போராடி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு,போராடிப் பெற்ற பெயர்களை வைத்து எமது பெறுமானங்களை பேணிக் கொள்ள முடியாமல் சீரழிவதை விட பெறுமானங்களை வென்றெடுக்கும் நேர்மையான சக்தியாக முஸ்லிம்கள் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோம் உண்மையில் முஸ்லிம் என்பவன் இனத்தால் அல்ல பண்பாலே அடையாளப் படுத்தப்பட வேண்டியவன்.
No comments:
Post a Comment