Sunday, December 22, 2013

“நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” அப்துல் வஹ்ஹாப் அல்-மிஸைரி

December 22, 2013 at 12:10am

 அப்துல் வஹ்ஹாப் அல்-மிஸைரி அமெரிக்க ஆங்கில இலக்கியத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று மிகத் தீவிர கம்யுனிஸ்டாக இருந்தவர். இப்போது மேற்கு சிந்தனையின் ஆழம் கண்டு அதனை ஆழ்ந்து விமர்சிக்கும் பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர்.  

குடும்பம், வீடு என்பன முழுமையானதொரு சட்ட ஒழுங்கைக் கொண்ட நிறுவனம். அதுவே சமூக அமைப்பின் அடிப்படை,முதல் அலகு. இந்த வகையில் அந்நிறுவனத்துள்ளே செய்யப்படும் பணிகள் பாரிய பாதிப்பை குறிப்பிட்ட சமூகத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் ஏற்படுத்துகின்றன. இக்கருத்து இப்போது மறக்கப்பட்டு, குடும்பமும் வீடும் ஒரு சிறையாகவும் பெண்ணின் ஆழுமையை அழிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. வீட்டுக்கு வெளியே தொழில் புரிவது தான் “தொழில்” ஆகவும் பெண்ணுக்கு கண்ணியத்தைத் தருவதாகவும் கருதப்படுகிறது. இக்கருத்து மேற்க்கத்தேய சிந்தனை ஆதிக்கத்தால் பெண்களின் மனதில் கூட ஆழப் பதிந்துள்ளது. இக்கருத்தையே சிந்தனையாளர் அப்துல் வஹ்ஹாப் அல் மிஸைரி அவர்கள் தமக்கேயுரிய பாணியில் அழகாகத் தருகிறார்.

 

“நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?”
 “நான் வீட்டு மனைவி மட்டுமே!”         
  “இன்று என்ன தொழில் செய்தீர்கள்?”
   “ஒன்றும் செய்யவில்லை சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்.”
   பெண் விடுதலை இயக்கங்கள், பெண்-மையப்படுத்திய போராட்டங்கள் உருவாக முன்னால் அமெரிக்காவில் 60களில் இத்தகைய உரையாடல்களைப் பல்லாயிரம் முறை நான் கேட்டிருப்பேன். இப்போது இத்தகைய உரையாடல்களை எகிப்தில் கேட்கிறேன். இத்தகைய உரையாடல்களுக்குப் பின்னால் உள்ள பொருள் யாது என நோக்குவது மிக அவசியம் எனக் கருதுகிறேன்.
   “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்…”
     “பெண்ணே! இங்கு வேலை செய்தல், தொழில் புரிதல் என்பது வீட்டுக்கு வெளியே பொதுவாழ்வில் உழைப்பது மட்டுமே. கணக்கிடவும் அளவிடவும் முடியுமானது மட்டுமே. குறிப்பிட்டளவு கூலியாகப் பணம் பெற முயுமானது மட்டுமே தொழில். உன் தனிப்பட்ட வாழ்வில் நீ மேற்கொள்ளும் ஏனைய தொழிற்பாடுகள் அனைத்தும்; பிள்ளைகளை வளர்த்தல், குடும்பத்தை பராமரித்தல் போன்ற மிக உயர்ந்த செயற்பாடுகள் உட்பட தொழிலாக மாட்டாது. அவை வீட்டுக்குள்ளே நிகழ்பவை. அதற்கு நீ எந்தக் கூலியும் பெற்றுக்கொள்வதில்லை. அதனை அளவிடவும் முடியாது.அது பொது வாழ்வோடு தொடர்பற்றது. தனிப்பட்ட வாழ்கைக்குரியது. வீட்டில் நான் உழைப்பது எனது மனித ஆளுமையை உறுதி செய்கிறது என்று நீ சொல்லாதே. அது மனிதப் பெறுமானங்களையும், மனித இயல்பு குறித்த சிந்தனையையும் பயமுறுத்துவதாக அமைந்து விடும். இவை விஞ்ஞான புர்வமான விடயங்கள் அன்று. அதாவது பௌதீக, சடவாத உண்மைகள் அன்று. ஒரு அரசாங்க அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதை விட வீட்டில் இருப்பதால் என் சமூகம் என்னால் அதிகமான பிரயோசனம் பெறும் என்றும் சொல்லி விடாதே. ஏனெனில் வரலாற்றின் பொதுவான ஓட்டம் அனைத்துப் பெண்களும் தொழில் புரிய வேண்டும் எனக்காட்டுகிறது. அனைவரும் சந்தைகளிலும் தொழிற்ச்சங்கங்களிலும் பொது வாழ்விலும் ஓடி உழைக்க வேண்டும் என்கிறது”  
      “இந்த விளக்கத்தை நான் ஏற்றுக் கொண்டால்- ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், அதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட பௌதீக விஞ்ஞான புர்வமான கருத்து.” (அப்போது நான்) வெறுமனே ஒரு வீட்டு மனைவி மட்டுமே. நான் வீட்டின் உள்ளே செய்யும் வேலைகள் அனைத்தும் தொழிலன்று.
       “இன்று என்ன தொழில் செய்தீர்கள்?”
  “நான் வீட்டைக் கூட்டித் துப்புரவாக்கினேன், உணவு சமைத்தேன், எனது மூத்த மகளை பாடசாலைக்கு அனுப்பி வைத்தேன். எனது இளைய மகளுக்கு உணவு ஊட்டினேன். கணவனை வேலை விட்டு வரும்போது எதிர்க் கொண்டேன். இவ்வாறு அனைவருக்கும் அமைதி கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். இவ்வளவு வேலையையும் நான் செய்தபோதும் அவை நான் வீட்டிற்குள்ளே செய்யும் கூலி பெறாத செயற்பாடுகள். எனவே நான் எதுவும் செய்யவில்லை. சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்.
       இத்தகையதொரு சாதாரண உரையாடலில் கூட, உழைத்தல் என்ற சொல் முற்றிலும் ஒரு கொள்கை சார் பிரயோகமாக மாறி அச்சொல் தன் குற்றமற்ற தன்மையை இழந்துள்ளமையையும் வரையறுத்த ஒரு கலைச் சொல் பிரயோகமாக மாறியுள்ளமையையும் அவதானிக்கிறோம். அக்கலைச் சொல் மேற்க்கத்தேய மதச்சார்பற்ற அறிவு எல்லையின் உள்ளேயே முழுமையாக விளங்கப்பட முடியுமான நிலையையும் இங்கு அவதானிக்க முடியும்.
      உனது வீட்டுக்கு வெளியே பொது வாழ்வில் கூலி பெற்று விளையும் உழைப்பே பொருளாதார மனிதனின் உழைப்பாகும். பொருளாதார மனிதன் என்பவன் ஒரு உற்பத்தியாளன். ஒரு நுகர்வோன் ஆவான். அவன் சந்தையின், தொழிற்ச்சாலையின் ஒரு பகுதி. அவனது  நகர்வுகளையும், அமைதி நிலையையும் அளவிட முடியும். ஆனால் தனிப்பட்ட வாழ்வில் இயங்கும் வெறும் மனிதன் நிறைய வேலைகளைச் செய்ய முடியும். ஆனால் அவற்றில் பலவற்றை அளவிட முடியாது. எனவே அவை அறிவியலுக்கான ஒரு பொருளாகக் கொள்ளப்பட முடியாது. இந்த வகையில் அந்த அப்பாவி மனைவி பௌதீக சடவாத கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது எதுவுமே செய்யவில்லை. எனவே, அவள் உழைக்க வேண்டுமானால் அதாவது சம்பளம் பெற்று தனது கண்ணியத்தை மீள அடைய வேண்டுமாயின் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். அதனால் பிள்ளைகள் சீரழிந்து போகலாம். குடும்பக் கட்டுக் கோப்பு உடையலாம். நாகரிகத்தின் தனிப்பண்பு இழக்கப்படலாம். (ஏனெனில் தாயே பிள்ளைகளுக்கு நாகரிகத்தையும் பெறுமானங்களையும் கற்றுக் கொடுக்கிறாள். எனினும் இவை எல்லாம் இரண்டாம் தரமான விடயங்களே.)
                                                                                   நன்றி:மீள்பார்வை முஹர்ரம் மலர்-1421(2000) 

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...